மனித சக்தியை நாடிய
மனம் என்றோ மாண்டுவிட்டது
இயந்திர சக்தியை நாடும்
இயந்திரமே இன்று உலவுகிறது
அன்பு அரவணைப்பு உபசரிப்பு
எங்கே போனது?
இயந்திரத்தை போல்
இயற்க்கை அழகை இழந்தது ஏன்?
எனக்கோ சந்தேகம்
எனை சுற்றி மனித சமூகம் தான் உள்ளதா?
நானும் மனித இனத்தை சார்ந்தவன் தானா?