Jun 29, 2015

கயல்விழியால் கொக்கென கொத்தி
மலரிதழால் கனிச்சுவை தரும் நீ
ஒரு முரண்பாட்டு கவிதையே 
மனிதம் மறந்த மனிதர்கள் மத்தியில்
மனிதனாய் வாழ முயற்சிக்கிறேன்

அவமானங்களும் கேலிகளும் மட்டுமே
ஒவ்வொருநாளின் எச்சமாக முடிகிறது

இருந்தும் விடியலுக்காக காத்திருக்கிறேன்
மனிதம் மறவா மனிதனாய் வாழ