கயல்விழியால் கொக்கென கொத்தி
மலரிதழால் கனிச்சுவை தரும் நீ
ஒரு முரண்பாட்டு கவிதையே
மனிதம் மறந்த மனிதர்கள் மத்தியில்
மனிதனாய் வாழ முயற்சிக்கிறேன்
அவமானங்களும் கேலிகளும் மட்டுமே
ஒவ்வொருநாளின் எச்சமாக முடிகிறது
இருந்தும் விடியலுக்காக காத்திருக்கிறேன்
மனிதம் மறவா மனிதனாய் வாழ
May 20, 2015
அழகே!
தேகம் தேய தேடி
மனம் வாடி
கண்கள் தவிக்க
தாய் கண்ட சேயாய்
நான் ஆர்பரிப்பது எப்போது?
உன் வாசனையும் நினைவும்
நீங்காத நெஞ்சோடு
உன் மலர்மடியில் பள்ளிகொள்ள
சேய் கண்ட தாயாய்
எனை அணைப்பது எப்போது?