May 20, 2015

அழகே!
தேகம் தேய தேடி
மனம் வாடி
கண்கள் தவிக்க
தாய் கண்ட சேயாய்
நான் ஆர்பரிப்பது எப்போது?
உன் வாசனையும் நினைவும்
நீங்காத நெஞ்சோடு
உன் மலர்மடியில் பள்ளிகொள்ள
சேய் கண்ட தாயாய்
எனை அணைப்பது எப்போது?