Feb 5, 2011

நான் பிறவாமல் இருந்திருந்தால்
அவள் கலங்காமல் இருந்திருப்பாள்

எனை காதல் கொள்ளாமலிருந்திருந்தால்
அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள்

எனை மணக்காமல் இருந்தாலாவது
ஆனந்தமாக வாழ்ந்திருப்பாள்

நான் இறந்துவிட்டால்
இனி வரும் காலமாவது
நிம்மதி உண்டாகுமல்லவா?

நாளுக்காக காத்திருக்கிறேன்
நாதியற்ற பிணமாய் செல்ல...

No comments: