கற்பனை கிரிடம் ஏந்தி நானிருக்க
வளைந்து நெளிந்து வரும் வஞ்சி
எனை கவி சமைக்க வைத்தாள்
சுவை கூட்ட
காமந்தனை கண்களில் ஏந்தி
கீழிதழ் மடித்து
முத்தென பல் வரிசை வைத்து
இன்ப ஊற்றாய் சொற்கள் சிந்த
காற்றோடு கைகோர்த்தாடும்
அவள் தலை மயிரில்
சொல் சிக்காமல் விளையாடும்
அவளை எழுத எழுத
கண் சிவந்து கொண்டே போகும்
No comments:
Post a Comment