கர்பவாசல் வழி வந்த போதே
காற்று சொன்ன செய்தி இது
வாரி எடுத்து வாகை சூட
வாசலில் வருவான் காலனென்று
யாருமில்லை நினைவில்
மனதோடு மரண ஓலங்கள் மட்டுமே
மனப்புதையல் மாயரூபம் கொண்டு
கண்ணுக்கும் காலனுக்கும் நடுவிலாடுது
உயிர் சொல்லொன்று தொண்டைக்குழியில் சிக்கியது
வெளிவர முயற்சித்த வார்த்தை
மூடியிருந்த பின் வாசலை திறந்தது
வாசல் வழி மலம் சிந்தி மரணமெய்தேன் - நான்
உயிர் பெற்றதும் கொடுத்ததும் முன் வாசலில் - என்
உயிர் பிரிந்தது பின் வாசலிலே
No comments:
Post a Comment