ஒளி வீசும் கண்ணுடையாள்
அளிக்கும் காதல் கொண்டுற்றாள் - அவள்
கண்ணுற்று பார்த்த
காளை யான்
இதழ் விரித்து சிரிக்கும் முன் - கண்டதும்
இதயவிதழ் விரியச் செய்தாள்
ஓர விழி
ஓவியமாய் எனை தாக்கினாள்
உறங்கி கிடந்த அணுக்களெல்லாம்
உயிருற்று உடலெங்கும் உலவச் செய்தாள்
உயிர் பெற்ற அணுக்களெல்லாம் - அவளை
உதவிக்கு கண்விழியால் அழைத்தன
No comments:
Post a Comment