எத்தனையோ இரவு சேர்த்து வைத்த
கற்பனை எல்லாம் இடித்துவிட்டு
இயல்பாய் போகும் பதுமையே! - நீ
மனதினுள் அடியெடுத்து வைத்தப்போது
மரணவேதனை தருவாயென்று எண்ணவில்லை
நித்தம் நித்தம்
மணநாளை எதிபார்த்து காத்திருந்தவனுக்கு
மனமொன்று இருப்பதை மறந்து
உடைத்தெறிந்து போனாயே
நீ உண்மையாகவே காதலித்தாயா?
காதலுக்கு மனம் தான் அஸ்திவாரமென்பார்களே!
No comments:
Post a Comment