Sep 19, 2009

அவள் கண் மேல்
அவள் உடலுக்கு தான்
எவ்வளவு ஆசை
அந்த அழகிய விழிகளை
எப்போது தழுவிநிற்கும் இமை
அந்த காவிய விழியோடு
உறவாட கண்ணோரம்காத்திருக்கும் தலைமயிர்
அவள் கண்களை காணாத போதும்
விழிநீரில் கண்ணழகு காணும் கன்னம்
கண்ணீரை துடைக்கும் சாக்கில்
விழிகளை கண்டு செல்லும் விரல்

No comments: