Sep 19, 2009

இரந்து உண்டு வாழ்வதை விட
இரை பையை அறுத்து விடு

குறை கூறி குற்றம் பார்ப்பதை விட
நிறை பார்த்து நிம்மதி பெற்று விடு

கொச்சை புத்தி கொண்டு அலைவதை விட
கொள்கை குணத்தோடு அமலனாகி விடு

தங்கலர் என்றொருவரை பெறுவதை விட
தரம் பார்த்து பழகி விடு

பொய் கூறி நாணி வாழ்வதை விட
மெய்யுரைத்து வீரமரணம் அடைந்து விடு

சிறந்து நீ வாழ கற்பதை விட
சிறிது ஊர் வாழ கற்று விடு

No comments: