இரந்து உண்டு வாழ்வதை விட
இரை பையை அறுத்து விடு
குறை கூறி குற்றம் பார்ப்பதை விட
நிறை பார்த்து நிம்மதி பெற்று விடு
கொச்சை புத்தி கொண்டு அலைவதை விட
கொள்கை குணத்தோடு அமலனாகி விடு
தங்கலர் என்றொருவரை பெறுவதை விட
தரம் பார்த்து பழகி விடு
பொய் கூறி நாணி வாழ்வதை விட
மெய்யுரைத்து வீரமரணம் அடைந்து விடு
சிறந்து நீ வாழ கற்பதை விட
சிறிது ஊர் வாழ கற்று விடு
No comments:
Post a Comment