விதி வழியென்று மதி இழந்து
விண்ணோடு உறவு கொண்டு போனாயோ
நேரம் தவறாது நிதானம் தவறினாயோ
மணவாசனை மறையாது மண்வாசனை கொண்டாயோ
இருப்பது ஒருயிரென்று மறந்து நின்னையே மாய்த்தாயோ
நொடிப்பொழுதில் நாடியிழந்து மரணக்குழி பூண்டாயோ
ஆசைகள் கனவுகள் பல தாங்கிய
உன் உள்ளம்
ஒரு பெருத்த சோகத்தை தாங்க மறந்ததேனோ
No comments:
Post a Comment