Sep 19, 2009

விதி வழியென்று மதி இழந்து
விண்ணோடு உறவு கொண்டு போனாயோ
நேரம் தவறாது நிதானம் தவறினாயோ
மணவாசனை மறையாது மண்வாசனை கொண்டாயோ
இருப்பது ஒருயிரென்று மறந்து நின்னையே மாய்த்தாயோ
நொடிப்பொழுதில் நாடியிழந்து மரணக்குழி பூண்டாயோ
ஆசைகள் கனவுகள் பல தாங்கிய
உன் உள்ளம்
ஒரு பெருத்த சோகத்தை தாங்க மறந்ததேனோ

No comments: