Sep 19, 2009

காதல் கொடுத்த காயத்தால்
காயம் கடிந்து அலைகிறாயோ
உண்மைஉறவு பிரிவின் வருத்தத்தில்
உணர்ச்சி கொண்டு வாழ்வழிக்கிறாயோ
வருவோர்போவோர் ஆயிரமுண்டு வாழ்வில்
வருவோருக்கு உன்வாழ்வில் வசந்தமில்லையோ
மண்ணிலென்ன வாழ்வு வாழ்கிறாய் - உன்
மனதைநீயே புண்படுத்தும்வாழ்வு வாழ்கிறாயோ
மனம் என்ன தூக்குகயிறா
மயங்கியசோகங்களின் சுமையில் வாழ்வொழிய
மூடர்களே!
மூடத்தனத்தின் முழுவுருவு நீங்களே
கண்னற்றவரை உற்று பாருங்கள்
காண்பதெல்லாம் இருளென்றிருக்க சிரிக்கவில்லையா
உன்காயத்திற்கு நீயேமருந்திட முடியவில்லையெனில்
உற்றபிறர் காயத்திற்குமருந்தென எவ்வாறிருப்பீர்
வார்த்தைகளில் வாழ்க்கை நடத்தி
வடுவின் வடிவம் அறியாதவரே
காயம் ஆரும் வடுமாறாதென்பீர் - ஆரவிடாது
காயத்தை புண்படுத்தி கத்துவீர்
பார்ப்போர் பிறரைகடிக்க ஆறுதல்கொள்வீர்
பாவம் ஓரிடம் பழியோரிடமா ?

No comments: