கெண்டங்கால் தெரிய
கந்தாங்கி சேல கட்டி
கலயத்துல கஞ்சி நெரப்பி
வரப்பு வழி நீ நடந்தாலே
தல குனிஞ்ச கதிர் எல்லாம்
தல தூக்கி உன்ன பாக்குண்டி
உன் காலோடு உரசி மோகம் கொள்ளுண்டி
நாந்தான் உன் புருசெனு
தெரிஞ்ச கதிர் எல்லாம்
என் கைய அறுக்குண்டி
அதனால வரும் போது
கதிர எல்லாம் கண்ணால
கண்டிச்சுட்டு வாடி
நா ஒன் கண்ணுக்கு அடிங்கின மாதிரி
அதுகளும் அடுங்குண்டி
No comments:
Post a Comment