Sep 19, 2009

கடன் பெற்றால் தான்
வாழ்வென்ற நிலையிருக்க
வங்கிகள் வாசற்க்கதவடைத்து
கை நீட்டி காட்டுது கந்துவட்டிக்காரனை
அவனிடம் வாங்கிய பணம்
வீடு வந்து சேரும் முன்
வட்டியாய் அவனிடமே
சென்று சேர்ந்தது
ஐந்நூறு வாங்கிய இடத்தில்
ஐயாயிரம் செலுத்தியும்
அசல் தீரவில்லையாம்
மானமிழக்கும் வார்த்தை வாங்கி
அசல் என்று கழியுமென்று
ஊசல் ஆடுகிறது உயிர்
கருணை உள்ளம் கொண்டு
பார்த்த கைமாத்துக்கள் காலாவதியாகிப்போனது
இங்கு பணம்
கொடுப்பவனிடம் குறைவதுமில்லை
வாங்குபவனிடம் நிறைவதுமில்லை

No comments: