கவலை கொண்டு
கண்ணீர் வருமென்று
காலமறிந்து வருவான்
என் காதலன்
எழும்பிய நீர்
வழியும் முன்
முத்தொத்தடத்தால் காயவைப்பான்
என் காதலன்
என்னருகில் அவனிருந்திட
இந்த முத்தம்
எப்பொழுதும் கிடைத்திட - எனக்கு
கவலை கொண்டு வா தோழி
இந்த கவலைகளாலே
மனநிறைவு பெறுகிறேனடி
No comments:
Post a Comment