அள்ளி தலைமுடிந்த கோமகளே!
இருள் கொண்ட வானமாய் குந்தலிருக்க
ஒளி வீசும் பௌர்ணமி முகமிருக்க
மின்னும் மின்னாலாய் கண்ணிருக்க
பிடரியில் படங்திருக்கும் ஓவியமாய் மயிருருக்க
கள் ஊறி சிவந்ததாய் இதழிருக்க
கைகளின் காதலியாய் கன்னங்களிருக்க
யாருக்கு தான் கற்பனை வராது
கவிதை வடிக்க
உனை நினைக்கும் போதே
மோகம் வந்து அள்ளிக் கொள்கிறதே
No comments:
Post a Comment