சிவன் என்று சொல்லும் போதே
சிந்தை எல்லாம் சிலிர்க்குதடா
தப்பு செய்யும் போது
சிவந்த கண் கொண்டு திருத்துபவன்டா
மனம் திருந்தும் போது
செங்கை கொண்டு அணைப்பவன்டா -என்
நடையின் கம்பீரத்தின்
நாடியாய் இருப்பவன்டா
கண்ணின் ஒளியாயிருப்பவன்டா
உடலின் உயிராயிருப்பவன்டா - இத்தகைய
சிவபெருமானே என் சிந்தை எனும்
சிவிகை ஏற வல்லவன்டா
No comments:
Post a Comment