என் ஆத்தா
மஞ்சள் தடவி திஷ்டி பொட்டு
வைத்த கால் இது
என் அப்பன்
இதழ் பதித்த தடாகம் இது
என் சோக சந்தோஷ கோபம் காட்டும்
நான்காம் கண் இது
முள் தைத்தாலும் கல் இடரினாலும்
தன் நிலை மாறாமல்
நடை போட்ட கால்கள் - இன்று
இறைவனை மறைக்கும் நந்தியாய்
நடையின் பாதங்களை மறைக்கிறது -இதுவரை
மொத்த உடலை மட்டும் தாங்கிய கால்கள்
வலியையும் சேர்த்து தாங்கட்டும்
No comments:
Post a Comment