பொய்க்கதை கேட்டு
குமுறி எழுந்தது ஒரு காலம்
குமுறலில்
அழுது துடித்தது ஒரு காலம்
அழுகைக்கு
ஆருதல் தேடி அலைந்தது ஒரு காலம்
ஆருதலில்
அரவணைப்பு தேடியது ஒரு காலம்
அரவணைப்பில்
ஆனந்தம் தேடியது ஒரு காலம்
ஆனந்தத்தில்
ஆட்டம் போட்டது ஒரு காலம்
ஆட்டத்தில்
ஆணவம் கொண்டது ஒரு காலம்
ஆணவத்தில்
அறிவிழந்தது ஒரு காலம்
அறிவால்
உலகை ஆள்வது இக்காலம்
No comments:
Post a Comment