Sep 18, 2009

பொய்க்கதை கேட்டு
குமுறி எழுந்தது ஒரு காலம்
குமுறலில்
அழுது துடித்தது ஒரு காலம்
அழுகைக்கு
ஆருதல் தேடி அலைந்தது ஒரு காலம்
ஆருதலில்
அரவணைப்பு தேடியது ஒரு காலம்
அரவணைப்பில்
ஆனந்தம் தேடியது ஒரு காலம்
ஆனந்தத்தில்
ஆட்டம் போட்டது ஒரு காலம்
ஆட்டத்தில்
ஆணவம் கொண்டது ஒரு காலம்
ஆணவத்தில்
அறிவிழந்தது ஒரு காலம்
அறிவால்
உலகை ஆள்வது இக்காலம்

No comments: