Sep 18, 2009

வர்ணம் பூசி
மல்லி சூடி
ஓர விழியில்
எனை அழைக்கிறாள்
காணாது போல் நான்
காட்சி மற்ற
இருமலும் சிருமளுமாய்
எனக்கு உணர்த்தினாள்
தண்ணீர் வேண்டுமா? என நான் கேட்க
கண் திறந்து
கோபம் வெளி வர
எனை நோக்கி சென்றாள் - பின்
ஆறுதலாய் அரவணைக்க சென்றால்
முகம் காட்ட மறுத்து
சுவரை பார்த்திருந்தாள்
கரம் பிடித்தால்
காரணம் கேட்கிறாள்
நாடி தூக்கி முகம் பார்த்தால்
எனை நாடாதே என்கிறாள்
கன்னம் வருடினால்
தனை புரியாதவன் என்கிறாள்
இடை தொட்டால்
கடை விழியில் முரைக்கிறாள்
தோல் பற்றினால்
தேளாய் கொட்டுகிறாள் - அவள்
கோபம் கலைந்து
ஆடை கலைவதற்க்குள்
அப்பப்பா இந்த சுகம்
வாழ் நாளும் மறவாது

No comments: