Sep 18, 2009

தல நெறய மல்லி பூ வச்சு
மாமர நிழல்ல பந்தி வச்சு
காத்துருக்குங்க வீட்ல
கைப்பிடி சோறுனாலும்
சேந்துதான் சாப்டனும்னு சத்தியம் வாங்கிருக்குங்க
அவ கைல உருண்ட உருட்டி
சாப்டுற சொகமிருக்கே
வெயில்ல வேல பாத்து
மழைல நனைரத விட சொகங்க
காத்து பலமா அடிக்குதுங்க
அவ காத்துல கரஞ்சுருவானு சொல்லலிங்க
அவ கையால சாப்டு
மடில படுத்து கொஞ்ச நேரம் கொஞ்சனுங்க
நேரம் போகுதுங்க
நா வாரீனுங்க

No comments: