மங்கள நேரம் பார்த்து
தாலி கட்டுவீர்
வந்த வரனை
வரமென்று வாழ்வீர்
மனையடி சாஸ்த்திரம் பார்த்து
வீடு கட்டுவீர்
குடி புகுந்து
குதுகலம் அடைவீர்
குடும்ப சுமை ஏற
கொழப்பம் கொள்வீர் - பின்
மனையாள் அடி சாஸ்த்திரம்
புரியாமல் பிதற்றுவீர் புலம்புவீர்
சங்கமித்த உடல் மனங்களுக்குள்
சங்கடங்களை விதைக்காதீர்
No comments:
Post a Comment