நாயகனின் நவதுவார நாதத்தில்
நான் எனும் அகந்தை அழிந்ததடா - அவன்
எனை மீட்டும் போது
அவன் பால் கொண்ட காதல் இன்னும் வளருதடா
எனை அணைக்கும் போது
அவன் மேல் நான் கொண்ட காதல் தெரிந்ததடா
எனை அரைந்த போது
என் மேல் அவன் கொண்ட காதல் புரிந்ததடா
அவன் மேனியின் திருநீற்று வாசனை - எனை
அவன் வசமே இழுக்குதடா
No comments:
Post a Comment