அறியாத பருவத்தில்
உருகாத மனமும் உருகும்
உனை நினைத்தால் என்பர்
விளையாட்டின் வேடிக்கை போல் சிரித்தேன்
புரியாத பல நடக்கையில்
செய்த வினையே என்று உணரும் போது - நீ
உருவற்று அவதரித்து சிரிக்கையில்
என் ஆணவமெல்லாம் செத்தொழிந்ததைய்யா
சித்தம் பித்தமேறும் இன்பம்
அம்மை அப்பன் வடிவே
உனை தவிர ஒருவரையும்
இனி மனம் நாடாதே
நான் நானாக இருக்க மட்டும் அருள் புரிவாயய்யா
No comments:
Post a Comment