சங்க கால மூவர்
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர்
சிவபுகழ் வளர்த்தனர்
எங்கள் கால மூவர்
பெரியார் அண்ணா கருணாநிதி
திராவிட உணர்வை வளர்த்தனர்
இவர்கள் வழியில்
தமிழகம் செழிக்க
கங்கை இந்துமாகடல் சேர வேண்டும்
சேது கால்வாயில் கப்பல் நீந்த வேண்டும்
சித்த மருத்துவம் முதன்மை பெற வேண்டும்
அறிவியல் நடப்பு முறையறிந்து
செயல் திட்டம் தீட்ட வேண்டும்
ஏர் உழும் கிழவன்
உண்டு ஏப்பம் விட வேண்டும்
விவசாயம் அறியாத தமிழன்
ஒருவரும் இலர் என்ற நிலை வேண்டும்
கைத்தொழிலை
கட்டாய பாடமாக்க வேண்டும்
மன உறுதிக்கு பள்ளியில் தியானம்
நடைமுறை படுத்த வேண்டும்
ஊழல் ஊற்றை
காலால் மிதித்திட வேண்டும்
சாதி என்னும் சாக்கடை புழுவை
மருந்தடித்து அழித்திட வேண்டும்
தமிழ் திராவிட உணர்வை
பிறப்பிலிருந்து ஊட்டிட வேண்டும்
மானம் பெரிதென உணர்த்திட வேண்டும்
வேண்டுவென வேண்டி விடைபெறுகிறேன்
No comments:
Post a Comment