உன்னிடம் நான் கண்ட
மர்மங்கள் பல
உன்னிடம் நான் காணாத
உண்மைகள் சில
ஆதாயமற்ற உன் ஆராதனையில்
அன்னையின் பாசம் மறந்தேன்
கபடமற்ற உன் செவ்விதழின் அசைவில்
சிந்தும் இலக்கியத்தை பருகினேன்
மெய் மறைத்து மெய் வளர்த்த எனை
ஆடையின்றி அவதரித்து அள்ளி சென்றதேனோ
இறைவா!
இன்பத்தின் ஏணியாய் தெரிகிறதே
இறுக தழுவுகையில்
இருக்கின்ற இன்னலெல்லாம் கரைகிறதே
இயல்பை கடந்த
எதார்த்தம் இது தானோ
No comments:
Post a Comment