Sep 18, 2009

உன்னிடம் நான் கண்ட
மர்மங்கள் பல
உன்னிடம் நான் காணாத
உண்மைகள் சில
ஆதாயமற்ற உன் ஆராதனையில்
அன்னையின் பாசம் மறந்தேன்
கபடமற்ற உன் செவ்விதழின் அசைவில்
சிந்தும் இலக்கியத்தை பருகினேன்
மெய் மறைத்து மெய் வளர்த்த எனை
ஆடையின்றி அவதரித்து அள்ளி சென்றதேனோ
இறைவா!
இன்பத்தின் ஏணியாய் தெரிகிறதே
இறுக தழுவுகையில்
இருக்கின்ற இன்னலெல்லாம் கரைகிறதே
இயல்பை கடந்த
எதார்த்தம் இது தானோ

No comments: