Sep 18, 2009

கொங்குதமிழ் பேசும் கோதையிவள்
பாரிமகளிரின் உறவோ
கண்ணில் அம்பெடுத்து எறியுமிவள்
சேரமாதேவியின் உறவோ
புலிக்கு பாலூட்டி வளர்க்குமிவள்
குந்தைபிராட்டியின் உறவோ
பொடியிடைநடையில் மீனென நீந்துமிவள்
பாண்டிமாதேவியின் உறவோ
யானை அம்பாரியில் வருமழகியிவள்
சிவகாமியின் உறவோ
உறவேதும் தெரியவில்லை
உலகம் போற்றும் தமிழ் மரபு
மாறா மங்கையை பற்றி

No comments: