அப்பனாய் நின்றவனே
ஆத்தாளாய் வந்தவனே
இருள் நீக்கி சென்றவனே
ஈகை புரிந்தவனே
உண்மையின் உருவாய் இருப்பவனே
ஊர் முழுதும் நிலைத்திருப்பவனே
எளியோருக்கு எளியோனே
ஏமாற்றங்களை அறுப்பவனே
ஐம்புலனின் நாயகனே
ஒடுங்கும் மனதின் அரசனே
ஓதும் வேதத்தின் தலைவனே
ஔடதத்தில் நிறைந்திருப்பவனே
No comments:
Post a Comment