Sep 18, 2009

அப்பனாய் நின்றவனே
ஆத்தாளாய் வந்தவனே
இருள் நீக்கி சென்றவனே
ஈகை புரிந்தவனே
உண்மையின் உருவாய் இருப்பவனே
ஊர் முழுதும் நிலைத்திருப்பவனே
எளியோருக்கு எளியோனே
ஏமாற்றங்களை அறுப்பவனே
ஐம்புலனின் நாயகனே
ஒடுங்கும் மனதின் அரசனே
ஓதும் வேதத்தின் தலைவனே
ஔடதத்தில் நிறைந்திருப்பவனே

No comments: