உயிரை பிஞ்சுருவில் வாங்கி வந்தாய்
என் மேல் நடிப்பதற்கு
முன்னூறுநாள் சுமப்பவளை
தெய்வம் என்கிறாய்
முன்னூறு நூறு நாள்
நான் சுமப்பதை மறந்தாயோ
உறவறுத்து போகும் உறவுகள்
நீ இறந்த பின்
விட்டு போவது என்னகத்தே
உலக சுமைகளுக்கு அறிமுகப்படித்தியவளை
சாவிலும் மறவேன் என்றாய்
உன் எலும்புகளை இன்றும் நான் சுமக்கிறேன்
நீ வாழும் போது எனை மறந்தாயே
No comments:
Post a Comment