Sep 18, 2009

பூமகளின் புலம்பல்


நஞ்சுண்டால் பஞ்சென பறக்கும்
உயிரை பிஞ்சுருவில் வாங்கி வந்தாய்
என் மேல் நடிப்பதற்கு
முன்னூறுநாள் சுமப்பவளை
தெய்வம் என்கிறாய்
முன்னூறு நூறு நாள்
நான் சுமப்பதை மறந்தாயோ
உறவறுத்து போகும் உறவுகள்
நீ இறந்த பின்
விட்டு போவது என்னகத்தே
உலக சுமைகளுக்கு அறிமுகப்படித்தியவளை
சாவிலும் மறவேன் என்றாய்
உன் எலும்புகளை இன்றும் நான் சுமக்கிறேன்
நீ வாழும் போது எனை மறந்தாயே

No comments: