Sep 18, 2009

நித்தம் நீராடி
நெற்றி நிறைய
குங்குமம் பூசி
மேனி எங்கும்
சந்தானம் தடவி
மௌனநடையில்
கர்பகிரகத்துள்
மலர் தூவி
மந்திரம் ஓதி
தந்திரம் செய்வான் - இந்த
தஞ்சம் புகுந்த தலைவன்
காவி எனும்
சாவி போட்டு
கைவண்ணம் காட்டுவான் - இந்த
கைதாகாத கைதி
இறை உணர்வை
புறத்தே கொண்டு
ஆசைகளுக்கு வேண்டுவான் - இந்த
ஆசை துறந்த ஆசாமி

No comments: