உராய்வுகளில் தான் உலகமே
சம்பவத்தின்
முடிச்சில் தான்
சங்கடங்கள் அவிழ்கின்றது
சங்கடங்களின்
முடிச்சில் தான்
சீண்டல்கள் அவிழ்கின்றது
சீண்டல்களின்
முடிச்சில் தான்
சண்டைகள் அவிழ்கின்றது
சண்டையின்
முடிவில் தான்
வெற்றியோ? தோல்வியோ? அவிழ்கின்றது
உராய்வுகளில் தான் உலகமே
No comments:
Post a Comment