விண்ணை பிளக்கும்
இடியோசையை மிஞ்சும்
எம்மக்களின்
தாகக் குரல்
மேனி நனைந்து வருடமாகுது
கண்ணீர் ஊறி மாதமாகுது
வாய் உலர்ந்து நாளாகுது - மொத்தத்தில்
அனைவரும் நடை பிணமானோமே
பஞ்சாங்கம் பார்க்கும்
பாட்டி கூட
பஞ்சாப்பிலிருந்து தண்ணீர்
எப்போது என்றுருக்கிறாள்
ஆறு வழியோடி எமையடைய வழியில்லை
ஆஸ்தி கோடி இருந்தும் வாழ நீரில்லை
இதை கூற நாவில் ஈரமில்லை
எமை காப்போர் யாருமில்லை
No comments:
Post a Comment