நடித்த நாடகங்களெல்லாம் போது
நாகரிக போர்வையில் நடமாடும்
நவநாகரிக பிணமா நீ?
நகைக்கும் போது
அகநகையில் அழுகை எதற்கு?
அமைதியாக இருந்த மனதில்
அனுமதியின்றி அழுக்கை புகட்டுவது எதற்கு?
மானமுள்ள மனிதா!
மாண்டு போன மரபுகளிலிருந்து வெளிவா
மஞ்சத்திலே மாயயை விட்டுவா
மகத்தான மனப்பான்போடு நடந்துவா - எல்லாமே
ஏக்கங்களின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது
No comments:
Post a Comment