Sep 18, 2009

தனிமையில் வாடும் மீராவே வருந்தாதே
உனக்காக கண்ணன் என்றும் உண்டு
பாடல்கள் பாடி
தம்புரா மீட்டி
கண்ணனுக்கு புரியாத மொழிகள் எதற்கு?
நீ சொல்லும் மொழி
அவனுக்கு புரிந்ததோ என்னவோ?
அவனுக்கு புரிந்த தெரிந்த
மொழிகளில் பேசினால் போதுமே!
நீ அவன் பின்னால் என்பது
அவன் உன் பின்னால் என்று மாறுமே
அவன் வருவான் என்று காத்திருந்து
காலம் கடத்தாதே
பழைய புராண கதையை கிழித்து
புதிய புராணம் நீ படிக்க வேண்டும்

No comments: