அதிகாலை பூமிக்கிறங்கும் பனித்துளியாய்
புனிதனாய் தோன்றிய மனிதரே
புழக்கத்திற்கு நீ தோற்றுவித்த நாணயம்
இன்று நாணயமிழந்து தவிக்கிறது
பண்டம் மாற்றும்முறை
பணம் மற்றும்முறையாய் லஞ்சமாய்
நாடெங்கும் தலை விரித்தாடுகிறது
இதுபோக காசுக்காக
காதல் கல்யாணம் கருமாதி கூட
தோற்றம் என்றாலே
பிரச்சனைதானோ ?- அது
மனிதனோ? பணமோ?
No comments:
Post a Comment