மங்கை அவள் மாமன் தோள் சாய
மன்னன் எந்தன் ஏக்கம் சாக
கன்னி அவள் காதல் கூட - அவள்
கண்ணீர் மார்பில் சுட
கவலைகலைய முத்தமிட
கள்ளி அவள் இதழ் விரித்தால்
Sep 22, 2009
Sep 19, 2009
உழவர் தினம்
எத்தனையோ இரவு சேர்த்து வைத்த
கற்பனை எல்லாம் இடித்துவிட்டு
இயல்பாய் போகும் பதுமையே! - நீ
மனதினுள் அடியெடுத்து வைத்தப்போது
மரணவேதனை தருவாயென்று எண்ணவில்லை
நித்தம் நித்தம்
மணநாளை எதிபார்த்து காத்திருந்தவனுக்கு
மனமொன்று இருப்பதை மறந்து
உடைத்தெறிந்து போனாயே
நீ உண்மையாகவே காதலித்தாயா?
காதலுக்கு மனம் தான் அஸ்திவாரமென்பார்களே!
கற்பனை எல்லாம் இடித்துவிட்டு
இயல்பாய் போகும் பதுமையே! - நீ
மனதினுள் அடியெடுத்து வைத்தப்போது
மரணவேதனை தருவாயென்று எண்ணவில்லை
நித்தம் நித்தம்
மணநாளை எதிபார்த்து காத்திருந்தவனுக்கு
மனமொன்று இருப்பதை மறந்து
உடைத்தெறிந்து போனாயே
நீ உண்மையாகவே காதலித்தாயா?
காதலுக்கு மனம் தான் அஸ்திவாரமென்பார்களே!
எனக்கு சூரியோதயம்
நீ என் வீட்டை கடந்து
பள்ளிக்கு செல்லும் வேலை
எனக்கு சூரியஷ்தமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை
எனக்கு சந்துரோதயம்
நீ என் வீட்டை கடந்து
டியூசன் செல்லும் வேலை
எனக்கு சந்திராஷ்டமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை
என் அஷ்தமனங்கள் எல்லாம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு செல்லும் பொழுது தான்
நீ என் வீட்டை கடந்து
பள்ளிக்கு செல்லும் வேலை
எனக்கு சூரியஷ்தமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை
எனக்கு சந்துரோதயம்
நீ என் வீட்டை கடந்து
டியூசன் செல்லும் வேலை
எனக்கு சந்திராஷ்டமனம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு நீ சென்றடயும் வேலை
என் அஷ்தமனங்கள் எல்லாம்
நீ என் வீட்டை கடந்து
உன் வீட்டுக்கு செல்லும் பொழுது தான்
பொன்னெடுத்து வந்தேன்
உன் நிறத்திற்கு ஒப்பிட
அது மங்க கண்டு
கடலில் மூழ்கி
முத்தெடுத்து வந்தேன்
உன் பற்களுக்கு ஒப்பிட
அது சிதற கண்டு
ஆகாயம் சென்று
மேகமெடுத்து வந்தேன்
உன் மென்மைக்கு ஒப்பிட
அது கடிதாக கண்டு
கானகம் சென்று
மலரெடுத்து வந்தேன்
உன் கண்களுக்கு ஒப்பிட
அது வாட கண்டு
உதவிக்கு உனை அழைத்தேன் - உனக்கு
ஒப்பான அழகை தேட
ஒப்பற்ற அழகி நீயென புரியாமல்
உன் நிறத்திற்கு ஒப்பிட
அது மங்க கண்டு
கடலில் மூழ்கி
முத்தெடுத்து வந்தேன்
உன் பற்களுக்கு ஒப்பிட
அது சிதற கண்டு
ஆகாயம் சென்று
மேகமெடுத்து வந்தேன்
உன் மென்மைக்கு ஒப்பிட
அது கடிதாக கண்டு
கானகம் சென்று
மலரெடுத்து வந்தேன்
உன் கண்களுக்கு ஒப்பிட
அது வாட கண்டு
உதவிக்கு உனை அழைத்தேன் - உனக்கு
ஒப்பான அழகை தேட
ஒப்பற்ற அழகி நீயென புரியாமல்
கெண்டங்கால் தெரிய
கந்தாங்கி சேல கட்டி
கலயத்துல கஞ்சி நெரப்பி
வரப்பு வழி நீ நடந்தாலே
தல குனிஞ்ச கதிர் எல்லாம்
தல தூக்கி உன்ன பாக்குண்டி
உன் காலோடு உரசி மோகம் கொள்ளுண்டி
நாந்தான் உன் புருசெனு
தெரிஞ்ச கதிர் எல்லாம்
என் கைய அறுக்குண்டி
அதனால வரும் போது
கதிர எல்லாம் கண்ணால
கண்டிச்சுட்டு வாடி
நா ஒன் கண்ணுக்கு அடிங்கின மாதிரி
அதுகளும் அடுங்குண்டி
கந்தாங்கி சேல கட்டி
கலயத்துல கஞ்சி நெரப்பி
வரப்பு வழி நீ நடந்தாலே
தல குனிஞ்ச கதிர் எல்லாம்
தல தூக்கி உன்ன பாக்குண்டி
உன் காலோடு உரசி மோகம் கொள்ளுண்டி
நாந்தான் உன் புருசெனு
தெரிஞ்ச கதிர் எல்லாம்
என் கைய அறுக்குண்டி
அதனால வரும் போது
கதிர எல்லாம் கண்ணால
கண்டிச்சுட்டு வாடி
நா ஒன் கண்ணுக்கு அடிங்கின மாதிரி
அதுகளும் அடுங்குண்டி
காதல் கொடுத்த காயத்தால்
காயம் கடிந்து அலைகிறாயோ
உண்மைஉறவு பிரிவின் வருத்தத்தில்
உணர்ச்சி கொண்டு வாழ்வழிக்கிறாயோ
வருவோர்போவோர் ஆயிரமுண்டு வாழ்வில்
வருவோருக்கு உன்வாழ்வில் வசந்தமில்லையோ
மண்ணிலென்ன வாழ்வு வாழ்கிறாய் - உன்
மனதைநீயே புண்படுத்தும்வாழ்வு வாழ்கிறாயோ
மனம் என்ன தூக்குகயிறா
மயங்கியசோகங்களின் சுமையில் வாழ்வொழிய
மூடர்களே!
மூடத்தனத்தின் முழுவுருவு நீங்களே
கண்னற்றவரை உற்று பாருங்கள்
காண்பதெல்லாம் இருளென்றிருக்க சிரிக்கவில்லையா
உன்காயத்திற்கு நீயேமருந்திட முடியவில்லையெனில்
உற்றபிறர் காயத்திற்குமருந்தென எவ்வாறிருப்பீர்
வார்த்தைகளில் வாழ்க்கை நடத்தி
வடுவின் வடிவம் அறியாதவரே
காயம் ஆரும் வடுமாறாதென்பீர் - ஆரவிடாது
காயத்தை புண்படுத்தி கத்துவீர்
பார்ப்போர் பிறரைகடிக்க ஆறுதல்கொள்வீர்
பாவம் ஓரிடம் பழியோரிடமா ?
காயம் கடிந்து அலைகிறாயோ
உண்மைஉறவு பிரிவின் வருத்தத்தில்
உணர்ச்சி கொண்டு வாழ்வழிக்கிறாயோ
வருவோர்போவோர் ஆயிரமுண்டு வாழ்வில்
வருவோருக்கு உன்வாழ்வில் வசந்தமில்லையோ
மண்ணிலென்ன வாழ்வு வாழ்கிறாய் - உன்
மனதைநீயே புண்படுத்தும்வாழ்வு வாழ்கிறாயோ
மனம் என்ன தூக்குகயிறா
மயங்கியசோகங்களின் சுமையில் வாழ்வொழிய
மூடர்களே!
மூடத்தனத்தின் முழுவுருவு நீங்களே
கண்னற்றவரை உற்று பாருங்கள்
காண்பதெல்லாம் இருளென்றிருக்க சிரிக்கவில்லையா
உன்காயத்திற்கு நீயேமருந்திட முடியவில்லையெனில்
உற்றபிறர் காயத்திற்குமருந்தென எவ்வாறிருப்பீர்
வார்த்தைகளில் வாழ்க்கை நடத்தி
வடுவின் வடிவம் அறியாதவரே
காயம் ஆரும் வடுமாறாதென்பீர் - ஆரவிடாது
காயத்தை புண்படுத்தி கத்துவீர்
பார்ப்போர் பிறரைகடிக்க ஆறுதல்கொள்வீர்
பாவம் ஓரிடம் பழியோரிடமா ?
அழகியவள் கொண்ட காதல்
அழிவுருமென்று ஐயம் கொண்டாளோ!
உலவித் திரியும் காற்றே
உதவியென எனக்கொன்று செய்
தோழியாய் அவள்மேனி தடவி
தோற்காது உன்காத லென்றுரைத்து
காதலன் யான் உரைப்பதை
காதில் நயம்பட தெரிவி
ஒருநாள் பூமிசுற்ற மறந்தாலும்
ஒருநாளும் மனமுனைசுற்ற மறப்பதில்லையடி
பாதாளசிறையில் அடைபட்டு அடிபட்டாலும்
பாவையுன் பவளமுகம் மறப்பதில்லையடி
நஞ்சுண்டு நீலநிறம் பெற்றாலும்
நங்கையுன் நற்குணமும் மறப்பதில்லையடி
நாச்சியே!
நானழியும் நிலை வந்தாலும்
நீகொண்ட காதல் அழியாதடி
நீயே இப்பச்சியின் நீடமடி
அழிவுருமென்று ஐயம் கொண்டாளோ!
உலவித் திரியும் காற்றே
உதவியென எனக்கொன்று செய்
தோழியாய் அவள்மேனி தடவி
தோற்காது உன்காத லென்றுரைத்து
காதலன் யான் உரைப்பதை
காதில் நயம்பட தெரிவி
ஒருநாள் பூமிசுற்ற மறந்தாலும்
ஒருநாளும் மனமுனைசுற்ற மறப்பதில்லையடி
பாதாளசிறையில் அடைபட்டு அடிபட்டாலும்
பாவையுன் பவளமுகம் மறப்பதில்லையடி
நஞ்சுண்டு நீலநிறம் பெற்றாலும்
நங்கையுன் நற்குணமும் மறப்பதில்லையடி
நாச்சியே!
நானழியும் நிலை வந்தாலும்
நீகொண்ட காதல் அழியாதடி
நீயே இப்பச்சியின் நீடமடி
மஞ்சள் நீராடி
புருவ மத்தியில் - சிறிய
வட்டமாய் திலகமிட்டு
மயக்கும் கண்களுக்கு
மெருகூட்ட மையிட்டு
பின்னிய குந்தலில் - ஒரு
முழம் மல்லி சூடி
மூங்கில் கைகளில் - ஐந்தாறு
கண்ணாடி வளையலிட்டு
வாழைத்தண்டு கால்களில் - ஆயிரம்
முத்திட்ட கொலுசணிந்து
காதோடு கதை பேசி
ஆடும் கம்மலணிந்து
மூக்கில் முத்தமிடும்
மூக்குத்தியணிந்து முகம் ஒளிர
கரு மென்நிற சேர்வையில்
தாவணி உடுத்தி
கொலுசு கீதம் பாட
சிற்றிடை ஆடி நடந்து வர
மெல்லிய சிரிப்புக்கு
தாளம் போட்டு கைவளையிணைந்து வர
காற்றில் பறக்கும் தாவணியை
கையணைத்து முன் கொசவத்தில் சொருக
கனவு கலைந்தது
கண் விழித்து பார்த்தால்
ஏதோ புது நாகரீகமாம்
கனவோடு போனாள் என் தமிழச்சி
புருவ மத்தியில் - சிறிய
வட்டமாய் திலகமிட்டு
மயக்கும் கண்களுக்கு
மெருகூட்ட மையிட்டு
பின்னிய குந்தலில் - ஒரு
முழம் மல்லி சூடி
மூங்கில் கைகளில் - ஐந்தாறு
கண்ணாடி வளையலிட்டு
வாழைத்தண்டு கால்களில் - ஆயிரம்
முத்திட்ட கொலுசணிந்து
காதோடு கதை பேசி
ஆடும் கம்மலணிந்து
மூக்கில் முத்தமிடும்
மூக்குத்தியணிந்து முகம் ஒளிர
கரு மென்நிற சேர்வையில்
தாவணி உடுத்தி
கொலுசு கீதம் பாட
சிற்றிடை ஆடி நடந்து வர
மெல்லிய சிரிப்புக்கு
தாளம் போட்டு கைவளையிணைந்து வர
காற்றில் பறக்கும் தாவணியை
கையணைத்து முன் கொசவத்தில் சொருக
கனவு கலைந்தது
கண் விழித்து பார்த்தால்
ஏதோ புது நாகரீகமாம்
கனவோடு போனாள் என் தமிழச்சி
அவன் என்பால்
கொண்ட காதலை
கேளடி தோழி !
கண்டால் கொத்தும் பாம்பென
ஆயிரம் பேர் வீதியெங்கும் காத்திருப்பார்
உற்றுப் பார்த்து
எட்டு வைக்கும் கள்வனை போல்
வீட்டு வாசற்படி வரை
யாரும் அறியாத வழித்துணையாய்
வழிப்போக்கன் போல் வருவானடி
சூரியன் மறைய
சந்திரன் ஒளி வீசுவது போல்
விழி திறந்திருந்தால் முன் நிற்பான்
மூடிய விழியானால் சிந்தையில் நிற்பானடி
இரைச்சல் நிறைந்த இந்த உலகில்
மௌனமான என் தாக ஓசை கேட்டு
தாகம் தணித்து வியப்பூட்டுவானடி
ஒன்றும் அறியாத பாலகனை போல்
பாசாங்கு செய்வது அறிந்தும்
அவன்பால் ஈர்ப்பு கூடுதடி
கொண்ட காதலை
கேளடி தோழி !
கண்டால் கொத்தும் பாம்பென
ஆயிரம் பேர் வீதியெங்கும் காத்திருப்பார்
உற்றுப் பார்த்து
எட்டு வைக்கும் கள்வனை போல்
வீட்டு வாசற்படி வரை
யாரும் அறியாத வழித்துணையாய்
வழிப்போக்கன் போல் வருவானடி
சூரியன் மறைய
சந்திரன் ஒளி வீசுவது போல்
விழி திறந்திருந்தால் முன் நிற்பான்
மூடிய விழியானால் சிந்தையில் நிற்பானடி
இரைச்சல் நிறைந்த இந்த உலகில்
மௌனமான என் தாக ஓசை கேட்டு
தாகம் தணித்து வியப்பூட்டுவானடி
ஒன்றும் அறியாத பாலகனை போல்
பாசாங்கு செய்வது அறிந்தும்
அவன்பால் ஈர்ப்பு கூடுதடி
இரந்து உண்டு வாழ்வதை விட
இரை பையை அறுத்து விடு
குறை கூறி குற்றம் பார்ப்பதை விட
நிறை பார்த்து நிம்மதி பெற்று விடு
கொச்சை புத்தி கொண்டு அலைவதை விட
கொள்கை குணத்தோடு அமலனாகி விடு
தங்கலர் என்றொருவரை பெறுவதை விட
தரம் பார்த்து பழகி விடு
பொய் கூறி நாணி வாழ்வதை விட
மெய்யுரைத்து வீரமரணம் அடைந்து விடு
சிறந்து நீ வாழ கற்பதை விட
சிறிது ஊர் வாழ கற்று விடு
இரை பையை அறுத்து விடு
குறை கூறி குற்றம் பார்ப்பதை விட
நிறை பார்த்து நிம்மதி பெற்று விடு
கொச்சை புத்தி கொண்டு அலைவதை விட
கொள்கை குணத்தோடு அமலனாகி விடு
தங்கலர் என்றொருவரை பெறுவதை விட
தரம் பார்த்து பழகி விடு
பொய் கூறி நாணி வாழ்வதை விட
மெய்யுரைத்து வீரமரணம் அடைந்து விடு
சிறந்து நீ வாழ கற்பதை விட
சிறிது ஊர் வாழ கற்று விடு
ஒளி வீசும் கண்ணுடையாள்
அளிக்கும் காதல் கொண்டுற்றாள் - அவள்
கண்ணுற்று பார்த்த
காளை யான்
இதழ் விரித்து சிரிக்கும் முன் - கண்டதும்
இதயவிதழ் விரியச் செய்தாள்
ஓர விழி
ஓவியமாய் எனை தாக்கினாள்
உறங்கி கிடந்த அணுக்களெல்லாம்
உயிருற்று உடலெங்கும் உலவச் செய்தாள்
உயிர் பெற்ற அணுக்களெல்லாம் - அவளை
உதவிக்கு கண்விழியால் அழைத்தன
அளிக்கும் காதல் கொண்டுற்றாள் - அவள்
கண்ணுற்று பார்த்த
காளை யான்
இதழ் விரித்து சிரிக்கும் முன் - கண்டதும்
இதயவிதழ் விரியச் செய்தாள்
ஓர விழி
ஓவியமாய் எனை தாக்கினாள்
உறங்கி கிடந்த அணுக்களெல்லாம்
உயிருற்று உடலெங்கும் உலவச் செய்தாள்
உயிர் பெற்ற அணுக்களெல்லாம் - அவளை
உதவிக்கு கண்விழியால் அழைத்தன
அப்பன் போட்ட கடுதாசி
நானும் உங்காத்தாளும் ஒன் ஞாபகமா
ஊருல வலம் வரோமையா
கைகாலெல்லாம் சொகமா இருக்குதாயா
வேலவேலைக்கு கஞ்சி குடுச்சுரியா
சாகடிக்கிற வெயிலடிக்குதுனு சேதி கேட்டேன்
வெயில்ல ரொம்ப அலையாதையா
நீ மொத தடவ அனுப்புன பணத்த
மடில கட்டிட்டு ஊர் முழுக்க
எம்புள்ள எம்புள்ளனு ஒன வித்துப்புட்டா உங்காத்தா
ஏழெட்டு மாசம் போக
உங்காத்தா என பாத்து கேட்டா
' முப்பதுக்கு முந்நூறு வாங்கி
அவன படிக்க வச்சியே
இப்டி முந்நூறு மயிலு தள்ளியிருந்து
பணம் அனுப்பவா?
இதுக்கு எம்புள்ள படிக்காம இருந்துருந்தா
எம்பக்கத்திலேயே இருந்துருப்பான்'-னு
காதுல கேட்டதும் ஆடிப்போயிட்டேன் சாமி
ஊருபக்கமே வராம
காசு மட்டும் அனுப்பிட்டே இருக்கேல
அதன் உங்காத்தாளுக்கு
ஒன் உருவம் கண்ண குத்திருச்சு போல
பக்கத்து வீட்டு பரமசிவம் இறந்ததுக்கு
அவென் புள்ள தந்தி அனுப்சானாம்
பொணத்த ரெண்டு நாள் வச்சுருக்க சொல்லி
வேல முடிஞ்சு வந்துறேன்னு
பரமசிவம் சொன்னது சரியா போச்சு
'கல்யாணம் காதுகுத்துனா ஞாயித்துக்கெழம வச்சாத்தான்
எம்புள்ள வருவேன்னு சொல்லுவான்
சாகுற காலத்துல எம்புள்ள பக்கத்துல இல்லையே
ஞாயித்துக்கெழமையா பாத்து எனக்கு சாவு வரணும்னு
அந்த ஈசன வேண்டிட்டு இருக்கேன்'- னு
அவென் பயந்தது சரியா போச்சையா
வேல வேலைனு நீயும் சுத்திட்டே இருக்க
எனக்கும் இந்த மாதிரி சாவு வந்துருமோனு
பயமா இருக்குதியா
வேல போனா போகுது
இங்க வந்துரியா
கூழோ கஞ்சியோ வெவசாயம்
பாத்து சேந்து குடிச்சுக்கலாமியா
சாகப்போற காலத்துல
எங்க நெஞ்சுல இருக்க ஆச இதுதாயா
நீ எங்க கூட இருக்கணும்னு
உங்காத்தாளுக்கு சொன்ன தைரியமும்
இப்ப என்கிட்ட இல்லையா
வயசாகி போச்சுல
அதன் புத்தி மங்கி போயி
ஏதேதோ சொல்லிப்புட்டேன்
கவலைப்படாம நீ வேல பாருயா
உங்காத்தாள நா தேத்திக்கிறேன்
அடுத்த கடுதாசி கொஞ்ச நாள் கழுச்சு போடுறேன்
பகுத்து பார்த்து
அறிவு சொன்ன
பெரியாரும் தோற்பானடி
உன் பருவமெதுவென்று
அணையா தமிழுணர்வு
மனதில் ஏற்றிய
பேரறிஞனும் தோற்பானடி
உன் தமிழைக்கண்டு
சொல்லை பிரித்து
கரு சொல்லும்
கலைஞரும் தோற்பானடி
உன் மௌனமொழியில்
தென்றல் உனை தீண்ட
இசைஞானியும் தோற்பானடி- நீ
தோல்கருவியா நரம்புக்கருவியாவென்று
மனதிலக பாடும்
கானக்குரலனும் தோற்பானடி
உன் மூச்சுக்குரலில்
செய்கையில் புதுமை செய்யும்
ரஜினியும் தோற்பானடி
உன் கண் சமிஞையில்
எனக்கு பிடித்த
அத்தனை பேரும்
உன்னிடம் தோற்றனர்
நான் உனை அடைந்து மகிழ்ந்திடவே
அறிவு சொன்ன
பெரியாரும் தோற்பானடி
உன் பருவமெதுவென்று
அணையா தமிழுணர்வு
மனதில் ஏற்றிய
பேரறிஞனும் தோற்பானடி
உன் தமிழைக்கண்டு
சொல்லை பிரித்து
கரு சொல்லும்
கலைஞரும் தோற்பானடி
உன் மௌனமொழியில்
தென்றல் உனை தீண்ட
இசைஞானியும் தோற்பானடி- நீ
தோல்கருவியா நரம்புக்கருவியாவென்று
மனதிலக பாடும்
கானக்குரலனும் தோற்பானடி
உன் மூச்சுக்குரலில்
செய்கையில் புதுமை செய்யும்
ரஜினியும் தோற்பானடி
உன் கண் சமிஞையில்
எனக்கு பிடித்த
அத்தனை பேரும்
உன்னிடம் தோற்றனர்
நான் உனை அடைந்து மகிழ்ந்திடவே
கடன் பெற்றால் தான்
வாழ்வென்ற நிலையிருக்க
வங்கிகள் வாசற்க்கதவடைத்து
கை நீட்டி காட்டுது கந்துவட்டிக்காரனை
அவனிடம் வாங்கிய பணம்
வீடு வந்து சேரும் முன்
வட்டியாய் அவனிடமே
சென்று சேர்ந்தது
ஐந்நூறு வாங்கிய இடத்தில்
ஐயாயிரம் செலுத்தியும்
அசல் தீரவில்லையாம்
மானமிழக்கும் வார்த்தை வாங்கி
அசல் என்று கழியுமென்று
ஊசல் ஆடுகிறது உயிர்
கருணை உள்ளம் கொண்டு
பார்த்த கைமாத்துக்கள் காலாவதியாகிப்போனது
இங்கு பணம்
கொடுப்பவனிடம் குறைவதுமில்லை
வாங்குபவனிடம் நிறைவதுமில்லை
வாழ்வென்ற நிலையிருக்க
வங்கிகள் வாசற்க்கதவடைத்து
கை நீட்டி காட்டுது கந்துவட்டிக்காரனை
அவனிடம் வாங்கிய பணம்
வீடு வந்து சேரும் முன்
வட்டியாய் அவனிடமே
சென்று சேர்ந்தது
ஐந்நூறு வாங்கிய இடத்தில்
ஐயாயிரம் செலுத்தியும்
அசல் தீரவில்லையாம்
மானமிழக்கும் வார்த்தை வாங்கி
அசல் என்று கழியுமென்று
ஊசல் ஆடுகிறது உயிர்
கருணை உள்ளம் கொண்டு
பார்த்த கைமாத்துக்கள் காலாவதியாகிப்போனது
இங்கு பணம்
கொடுப்பவனிடம் குறைவதுமில்லை
வாங்குபவனிடம் நிறைவதுமில்லை
அள்ளி தலைமுடிந்த கோமகளே!
இருள் கொண்ட வானமாய் குந்தலிருக்க
ஒளி வீசும் பௌர்ணமி முகமிருக்க
மின்னும் மின்னாலாய் கண்ணிருக்க
பிடரியில் படங்திருக்கும் ஓவியமாய் மயிருருக்க
கள் ஊறி சிவந்ததாய் இதழிருக்க
கைகளின் காதலியாய் கன்னங்களிருக்க
யாருக்கு தான் கற்பனை வராது
கவிதை வடிக்க
உனை நினைக்கும் போதே
மோகம் வந்து அள்ளிக் கொள்கிறதே
Sep 18, 2009
மனிதக்காதலா? மிருகக்காதலா?
உதாசினப்படுத்த தயார்நிலையில்
மனிதர்கள் ஒருபுறம்
உரிமைக்கான உரத்த குரலோடு
மிருகங்கள் மறுபுறம்
குறை சொல்லி பழக்கப்பட்ட
மனிதன் முதலில் ஆரம்பித்தான்
'மிருகமே! மிருகமே!
நீங்கள் செய்வது தரங்கெட்ட காதல்'
'துணையிருக்க பிறர் துணை
காணாதிருப்பது தான்
தரங்கெட்ட காதலா?' மிருகம் கேட்டது
'ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்கிறோம்
உங்களை போல் பார்ப்போர் மீது
பார்த்தயிடத்தில் உறவு கொள்வதில்லை' என் முடித்தான்
'எங்களை போல் வாழும்
ஆங்கிலனிடம் தான்
நீங்கள் கைநீட்டி காசு வாங்குகிறீர் - அவன்
கலாச்சாரம் இங்கு வர ஏங்குகிறீர்' என சொன்னது
வாய்மூடிப் போனான் மனிதன்
வாயில்லா பிராணி
வாய் திறக்க ஆரம்பித்தது
'எங்களின் காதலை பற்றி
உங்களுக்கென்ன தெரியும்
நீங்கள் எங்களிடம் புலம்புவது போல்
நாங்கள் உங்களிடம் புலம்பினோமா?
உங்களின் காதலை பற்றி எங்களுக்கு தெரியும்
பயங்கொள்ள வேண்டாம்
நம்பிக்கை துரோகம் செய்வது
எங்களின் வழக்கமன்று
உங்கள் காதலை உங்களை போல்
ஊரறிய இழிவு படுத்தமாட்டோம்
எங்களின் காதல் தரங்கெட்டதென
நீங்கள் மட்டும் சொல்லாதீர்'
'மனிதனே!
ஊரறிய உறவுகொள்ளும் நாங்கள்
உங்களைப்போல் உல்லாச காதல் செய்வதில்லை
நாங்கள் காதலில் காமத்தை மட்டும் காண்கிறோம்
உண்மையை சொல்ல
உங்களை போல் தயங்குவதில்லை
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
நீங்கள் காதலில் காதலை மட்டும் காண்கிறீர்களா?'
'ஒத்துக் கொள்கிறோம்
ஒரு காலத்தில் உயர்வான காதல் செய்தீர்
அன்று எங்கள் காதல் தரங்கெட்டதே - இன்றோ
எங்களின் காதலை விட
பன்மடங்கு தரங்கெட்ட காதல் செய்கிறீர்
ஆதலால் தான் எங்கள் காதலை
தரங்கெட்டதென சொல்லாதீர் என்கிறோம்'
'மானம் பெரிதென
வாய் வார்த்தையில் சொல்லும் மனிதர்களே!
கொடிது கொடிது மனிதக்காதல் கொடிது
அதனினும் கொடிது
மனிதம் மறந்த மனிதக்காதல் கொடிது'
என சொல்லி முடித்தன
இல்லை இல்லை
என சொல்லி முடித்தனர்
மனிதர்கள் வாய்மூடிக் கிடந்தன
கொங்குதமிழ் பேசும் கோதையிவள்
பாரிமகளிரின் உறவோ
கண்ணில் அம்பெடுத்து எறியுமிவள்
சேரமாதேவியின் உறவோ
புலிக்கு பாலூட்டி வளர்க்குமிவள்
குந்தைபிராட்டியின் உறவோ
பொடியிடைநடையில் மீனென நீந்துமிவள்
பாண்டிமாதேவியின் உறவோ
யானை அம்பாரியில் வருமழகியிவள்
சிவகாமியின் உறவோ
உறவேதும் தெரியவில்லை
உலகம் போற்றும் தமிழ் மரபு
மாறா மங்கையை பற்றி
பாரிமகளிரின் உறவோ
கண்ணில் அம்பெடுத்து எறியுமிவள்
சேரமாதேவியின் உறவோ
புலிக்கு பாலூட்டி வளர்க்குமிவள்
குந்தைபிராட்டியின் உறவோ
பொடியிடைநடையில் மீனென நீந்துமிவள்
பாண்டிமாதேவியின் உறவோ
யானை அம்பாரியில் வருமழகியிவள்
சிவகாமியின் உறவோ
உறவேதும் தெரியவில்லை
உலகம் போற்றும் தமிழ் மரபு
மாறா மங்கையை பற்றி
பூமகளின் புலம்பல்
உயிரை பிஞ்சுருவில் வாங்கி வந்தாய்
என் மேல் நடிப்பதற்கு
முன்னூறுநாள் சுமப்பவளை
தெய்வம் என்கிறாய்
முன்னூறு நூறு நாள்
நான் சுமப்பதை மறந்தாயோ
உறவறுத்து போகும் உறவுகள்
நீ இறந்த பின்
விட்டு போவது என்னகத்தே
உலக சுமைகளுக்கு அறிமுகப்படித்தியவளை
சாவிலும் மறவேன் என்றாய்
உன் எலும்புகளை இன்றும் நான் சுமக்கிறேன்
நீ வாழும் போது எனை மறந்தாயே
என் ஆத்தா
மஞ்சள் தடவி திஷ்டி பொட்டு
வைத்த கால் இது
என் அப்பன்
இதழ் பதித்த தடாகம் இது
என் சோக சந்தோஷ கோபம் காட்டும்
நான்காம் கண் இது
முள் தைத்தாலும் கல் இடரினாலும்
தன் நிலை மாறாமல்
நடை போட்ட கால்கள் - இன்று
இறைவனை மறைக்கும் நந்தியாய்
நடையின் பாதங்களை மறைக்கிறது -இதுவரை
மொத்த உடலை மட்டும் தாங்கிய கால்கள்
வலியையும் சேர்த்து தாங்கட்டும்
மஞ்சள் தடவி திஷ்டி பொட்டு
வைத்த கால் இது
என் அப்பன்
இதழ் பதித்த தடாகம் இது
என் சோக சந்தோஷ கோபம் காட்டும்
நான்காம் கண் இது
முள் தைத்தாலும் கல் இடரினாலும்
தன் நிலை மாறாமல்
நடை போட்ட கால்கள் - இன்று
இறைவனை மறைக்கும் நந்தியாய்
நடையின் பாதங்களை மறைக்கிறது -இதுவரை
மொத்த உடலை மட்டும் தாங்கிய கால்கள்
வலியையும் சேர்த்து தாங்கட்டும்
வறண்ட போதும்
தான் வறச்சி காட்டா
வளமையின் போது
வைரமாய் மின்னும் வைகை
காதலர்கள் வசந்தகால பறவையாய் கூடும்
அழகர் மலை
கார்த்திக்கேயனின் சமத்துவம் காட்டும்
பரங்குன்ற குன்று
சமண முனிகளின் சாகசம் காட்டும்
சமண மலை
யானை வயிற்றில் அழகன் உருவெடுத்த
யானை மலை
மன்னனாய் வலம் வர தூண்டும்
நாயக்கர் மஹால்
பெண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
மீனாட்சி கோயில்
இதுதான் சிற்ப வேலை என்றுணர்த்தும்
பாண்டியன் குடைகுகை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஆலவாய் நகரை பற்றி
கேளடி தோழி !
குருடருக்கும் பார்வை வருமடி
செவிடருக்கும் செவி திறக்குமடி
ஊமையருக்கும் மொழி பொழியுமடி
முடவருக்கு கால்கள் நடனமாடுமடி
இந்த நான்மாட கூடல் மாநகரிலே
"அக்கரைக்கு இக்கரை பச்சை"
என்பது முதுமொழியடி
"எக்கரையும் பச்சை "
மருதத்துக்கே உரித்த மொழியடி
காலை பனி
வயலோடு உறவாடுமடி - குத்தாமல்
ஊசியென நாசி வழியிறங்கும் குளிர்
இதனோடு உறவாட மனமேங்குமடி
உள்ளம் கவர்ந்தவர்
கண்கள் தேடும் விழாவடி
மனசிரமம் தீரும்
சித்திரை திருவிழாவடி
தேர் ஓடி விளையாடும் வீதியடி
விதி வினை தீரும் ஊரடி
இதுவே எங்கள் மதுரையடி
தான் வறச்சி காட்டா
வளமையின் போது
வைரமாய் மின்னும் வைகை
காதலர்கள் வசந்தகால பறவையாய் கூடும்
அழகர் மலை
கார்த்திக்கேயனின் சமத்துவம் காட்டும்
பரங்குன்ற குன்று
சமண முனிகளின் சாகசம் காட்டும்
சமண மலை
யானை வயிற்றில் அழகன் உருவெடுத்த
யானை மலை
மன்னனாய் வலம் வர தூண்டும்
நாயக்கர் மஹால்
பெண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்தும்
மீனாட்சி கோயில்
இதுதான் சிற்ப வேலை என்றுணர்த்தும்
பாண்டியன் குடைகுகை
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
ஆலவாய் நகரை பற்றி
கேளடி தோழி !
குருடருக்கும் பார்வை வருமடி
செவிடருக்கும் செவி திறக்குமடி
ஊமையருக்கும் மொழி பொழியுமடி
முடவருக்கு கால்கள் நடனமாடுமடி
இந்த நான்மாட கூடல் மாநகரிலே
"அக்கரைக்கு இக்கரை பச்சை"
என்பது முதுமொழியடி
"எக்கரையும் பச்சை "
மருதத்துக்கே உரித்த மொழியடி
காலை பனி
வயலோடு உறவாடுமடி - குத்தாமல்
ஊசியென நாசி வழியிறங்கும் குளிர்
இதனோடு உறவாட மனமேங்குமடி
உள்ளம் கவர்ந்தவர்
கண்கள் தேடும் விழாவடி
மனசிரமம் தீரும்
சித்திரை திருவிழாவடி
தேர் ஓடி விளையாடும் வீதியடி
விதி வினை தீரும் ஊரடி
இதுவே எங்கள் மதுரையடி
பொய்க்கதை கேட்டு
குமுறி எழுந்தது ஒரு காலம்
குமுறலில்
அழுது துடித்தது ஒரு காலம்
அழுகைக்கு
ஆருதல் தேடி அலைந்தது ஒரு காலம்
ஆருதலில்
அரவணைப்பு தேடியது ஒரு காலம்
அரவணைப்பில்
ஆனந்தம் தேடியது ஒரு காலம்
ஆனந்தத்தில்
ஆட்டம் போட்டது ஒரு காலம்
ஆட்டத்தில்
ஆணவம் கொண்டது ஒரு காலம்
ஆணவத்தில்
அறிவிழந்தது ஒரு காலம்
அறிவால்
உலகை ஆள்வது இக்காலம்
குமுறி எழுந்தது ஒரு காலம்
குமுறலில்
அழுது துடித்தது ஒரு காலம்
அழுகைக்கு
ஆருதல் தேடி அலைந்தது ஒரு காலம்
ஆருதலில்
அரவணைப்பு தேடியது ஒரு காலம்
அரவணைப்பில்
ஆனந்தம் தேடியது ஒரு காலம்
ஆனந்தத்தில்
ஆட்டம் போட்டது ஒரு காலம்
ஆட்டத்தில்
ஆணவம் கொண்டது ஒரு காலம்
ஆணவத்தில்
அறிவிழந்தது ஒரு காலம்
அறிவால்
உலகை ஆள்வது இக்காலம்
தல நெறய மல்லி பூ வச்சு
மாமர நிழல்ல பந்தி வச்சு
காத்துருக்குங்க வீட்ல
கைப்பிடி சோறுனாலும்
சேந்துதான் சாப்டனும்னு சத்தியம் வாங்கிருக்குங்க
அவ கைல உருண்ட உருட்டி
சாப்டுற சொகமிருக்கே
வெயில்ல வேல பாத்து
மழைல நனைரத விட சொகங்க
காத்து பலமா அடிக்குதுங்க
அவ காத்துல கரஞ்சுருவானு சொல்லலிங்க
அவ கையால சாப்டு
மடில படுத்து கொஞ்ச நேரம் கொஞ்சனுங்க
நேரம் போகுதுங்க
நா வாரீனுங்க
மாமர நிழல்ல பந்தி வச்சு
காத்துருக்குங்க வீட்ல
கைப்பிடி சோறுனாலும்
சேந்துதான் சாப்டனும்னு சத்தியம் வாங்கிருக்குங்க
அவ கைல உருண்ட உருட்டி
சாப்டுற சொகமிருக்கே
வெயில்ல வேல பாத்து
மழைல நனைரத விட சொகங்க
காத்து பலமா அடிக்குதுங்க
அவ காத்துல கரஞ்சுருவானு சொல்லலிங்க
அவ கையால சாப்டு
மடில படுத்து கொஞ்ச நேரம் கொஞ்சனுங்க
நேரம் போகுதுங்க
நா வாரீனுங்க
நான் காதலிக்கும் முறை தவறா?
பொய் சொல்வது பிடிக்காது என்றாள்
பொய் சொல்வதை விட்டேன்
மது வேண்டாம் என்றாள்
கோப்பையை உடைத்து எறிந்தேன்
பெண்களுடன் நெருங்கிய பழக்கம் பிடிக்காது என்றாள்
பழக்கத்திற்கு எல்லை வரையருத்தேன் - அவளின்
பிடிக்காத பட்டியலில் இருந்த அனைத்தையும்
நான் என்னிடமிருந்து விலக்கிவைத்தேன் - நான்
செய்த பாவமோ!
என்னை பிடிக்கவில்லை விலகி செல்கிறேன் என்றாள்
அவளுக்கு பிடிக்காத என்னை
"நான் விலக்கி வைக்கிறேன் " - நான்
காதலிக்கும் முறை தவறா?
பொய் சொல்வது பிடிக்காது என்றாள்
பொய் சொல்வதை விட்டேன்
மது வேண்டாம் என்றாள்
கோப்பையை உடைத்து எறிந்தேன்
பெண்களுடன் நெருங்கிய பழக்கம் பிடிக்காது என்றாள்
பழக்கத்திற்கு எல்லை வரையருத்தேன் - அவளின்
பிடிக்காத பட்டியலில் இருந்த அனைத்தையும்
நான் என்னிடமிருந்து விலக்கிவைத்தேன் - நான்
செய்த பாவமோ!
என்னை பிடிக்கவில்லை விலகி செல்கிறேன் என்றாள்
அவளுக்கு பிடிக்காத என்னை
"நான் விலக்கி வைக்கிறேன் " - நான்
காதலிக்கும் முறை தவறா?
சிவன் என்று சொல்லும் போதே
சிந்தை எல்லாம் சிலிர்க்குதடா
தப்பு செய்யும் போது
சிவந்த கண் கொண்டு திருத்துபவன்டா
மனம் திருந்தும் போது
செங்கை கொண்டு அணைப்பவன்டா -என்
நடையின் கம்பீரத்தின்
நாடியாய் இருப்பவன்டா
கண்ணின் ஒளியாயிருப்பவன்டா
உடலின் உயிராயிருப்பவன்டா - இத்தகைய
சிவபெருமானே என் சிந்தை எனும்
சிவிகை ஏற வல்லவன்டா
சிந்தை எல்லாம் சிலிர்க்குதடா
தப்பு செய்யும் போது
சிவந்த கண் கொண்டு திருத்துபவன்டா
மனம் திருந்தும் போது
செங்கை கொண்டு அணைப்பவன்டா -என்
நடையின் கம்பீரத்தின்
நாடியாய் இருப்பவன்டா
கண்ணின் ஒளியாயிருப்பவன்டா
உடலின் உயிராயிருப்பவன்டா - இத்தகைய
சிவபெருமானே என் சிந்தை எனும்
சிவிகை ஏற வல்லவன்டா
தாசிமார்
தேவதையாய் வந்தாள்
முகத்தில் மூவாயிரம்
தேவர்களின் ஆசீர்வாதம்
எத்தனை பேர் வளைத்தாலும்
தன் நிலைக்கு திரும்பும்
மூங்கில் போல் உடல் கொண்டவள் - அந்த
உடலுக்கு ஏத்த மார்புடையாள்
இதழ்களில் பனங்"கள்" ஊறி - என்
தாகம் தணிக்க தயங்காமல் நிற்பவள்
சிற்றிடையில் சிவந்த காமம்
கண்கள் முழுவது நிரப்பி - எனை
கட்டிலில் காதலிக்க காத்திருக்கிறாள்
மேனி ஏங்கும் மஞ்சள்
நான் பூச
கூச்சம் தாளாமல் சிரிக்கிறாள் - இவள்
உள்ளங்கை என் மார்பு தொடுகையில்
அந்தரங்க துன்பமெல்லாம் தண்ணிராய் கரைகிறது
என் சிரிப்பு கண்டு
வெட்க மிகுதியில் சிரிக்கிறாள்
செவ்விதழ் விரித்து
எனை சிவிகையில் ஏற்றுகிறாள் - இவளை
காணாத கணங்கள்
மனம் கங்காய் கொதிக்கிறது
இவளை கண்டதும்
வேதனை எல்லாம் வெந்து ஒழிந்தது
எனை கட்டி தழுவி
தோளில் தோகை விரித்தாடும்
இளமயில் இவள்
என் மார்பும் கழுத்தும்
இவள் புரளும் பஞ்சனைகள்
வேறு யாரு
என் மகள் தரும் முத்தம்
முக்கனி சுவையையும் மிஞ்சும்
அந்த முத்த ஈரம்
என் உள்ளுர
இறங்கும் உரம்
நான் பூச
கூச்சம் தாளாமல் சிரிக்கிறாள் - இவள்
உள்ளங்கை என் மார்பு தொடுகையில்
அந்தரங்க துன்பமெல்லாம் தண்ணிராய் கரைகிறது
என் சிரிப்பு கண்டு
வெட்க மிகுதியில் சிரிக்கிறாள்
செவ்விதழ் விரித்து
எனை சிவிகையில் ஏற்றுகிறாள் - இவளை
காணாத கணங்கள்
மனம் கங்காய் கொதிக்கிறது
இவளை கண்டதும்
வேதனை எல்லாம் வெந்து ஒழிந்தது
எனை கட்டி தழுவி
தோளில் தோகை விரித்தாடும்
இளமயில் இவள்
என் மார்பும் கழுத்தும்
இவள் புரளும் பஞ்சனைகள்
வேறு யாரு
என் மகள் தரும் முத்தம்
முக்கனி சுவையையும் மிஞ்சும்
அந்த முத்த ஈரம்
என் உள்ளுர
இறங்கும் உரம்
பிறப்பு
காடு காடு வாழ்வே
அடர்ந்த காடு
தேடு தேடு அதில்
நேர்வழி தேடு
பாடு பாடு உன்னத
உண்மையை பாடு
நாடு நாடு நிஜ
நாகரிகத்தை நாடு
போடு போடு தீயில்
பொய்மைகளை போடு
கூடு கூடு அன்பில்
ஒன்றாய் கூடு
தடு தடு காம
இச்சைகளை தடு
நடு நடு நல்ல
எண்ணங்களை நடு
ஓடு ஓடு இதில்
ஓயாமல் ஓடு
படு படு மனம்
பக்குவ படு
சூடு சூடு வெற்றி
மாலையை சூடு
ஆடு ஆடு உச்ச
ஆனந்தத்தில் ஆடு
தொடு தொடு இன்பத்தின்
எல்லையை தொடு
அடர்ந்த காடு
தேடு தேடு அதில்
நேர்வழி தேடு
பாடு பாடு உன்னத
உண்மையை பாடு
நாடு நாடு நிஜ
நாகரிகத்தை நாடு
போடு போடு தீயில்
பொய்மைகளை போடு
கூடு கூடு அன்பில்
ஒன்றாய் கூடு
தடு தடு காம
இச்சைகளை தடு
நடு நடு நல்ல
எண்ணங்களை நடு
ஓடு ஓடு இதில்
ஓயாமல் ஓடு
படு படு மனம்
பக்குவ படு
சூடு சூடு வெற்றி
மாலையை சூடு
ஆடு ஆடு உச்ச
ஆனந்தத்தில் ஆடு
தொடு தொடு இன்பத்தின்
எல்லையை தொடு
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
பைந்தமிழ் புலவன் சொன்ன
நெறி தவறிய பைத்தியக்காரனடா நான்
கடவுளுக்கு காத்து வைத்து
கதை சொன்ன பைத்தியக்காரனடா நான்
பண்டை மரபுகளை
மரணக்குழியில் தள்ளிய பைத்தியக்காரனடா நான்
கற்பியல் களவியல் ஒழுக்கம்
மறந்து திரியும் பைத்தியக்காரனடா நான்
நாகரிக போர்வைக்குள்
தீராத பாவம் தேடிய பைத்தியக்காரனடா நான்
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
பைந்தமிழ் புலவன் சொன்ன
நெறி தவறிய பைத்தியக்காரனடா நான்
கடவுளுக்கு காத்து வைத்து
கதை சொன்ன பைத்தியக்காரனடா நான்
பண்டை மரபுகளை
மரணக்குழியில் தள்ளிய பைத்தியக்காரனடா நான்
கற்பியல் களவியல் ஒழுக்கம்
மறந்து திரியும் பைத்தியக்காரனடா நான்
நாகரிக போர்வைக்குள்
தீராத பாவம் தேடிய பைத்தியக்காரனடா நான்
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா
பைத்தியக்காரனடா நான்
உன்னிடம் நான் கண்ட
மர்மங்கள் பல
உன்னிடம் நான் காணாத
உண்மைகள் சில
ஆதாயமற்ற உன் ஆராதனையில்
அன்னையின் பாசம் மறந்தேன்
கபடமற்ற உன் செவ்விதழின் அசைவில்
சிந்தும் இலக்கியத்தை பருகினேன்
மெய் மறைத்து மெய் வளர்த்த எனை
ஆடையின்றி அவதரித்து அள்ளி சென்றதேனோ
இறைவா!
இன்பத்தின் ஏணியாய் தெரிகிறதே
இறுக தழுவுகையில்
இருக்கின்ற இன்னலெல்லாம் கரைகிறதே
இயல்பை கடந்த
எதார்த்தம் இது தானோ
மர்மங்கள் பல
உன்னிடம் நான் காணாத
உண்மைகள் சில
ஆதாயமற்ற உன் ஆராதனையில்
அன்னையின் பாசம் மறந்தேன்
கபடமற்ற உன் செவ்விதழின் அசைவில்
சிந்தும் இலக்கியத்தை பருகினேன்
மெய் மறைத்து மெய் வளர்த்த எனை
ஆடையின்றி அவதரித்து அள்ளி சென்றதேனோ
இறைவா!
இன்பத்தின் ஏணியாய் தெரிகிறதே
இறுக தழுவுகையில்
இருக்கின்ற இன்னலெல்லாம் கரைகிறதே
இயல்பை கடந்த
எதார்த்தம் இது தானோ
அறியாத பருவத்தில்
உருகாத மனமும் உருகும்
உனை நினைத்தால் என்பர்
விளையாட்டின் வேடிக்கை போல் சிரித்தேன்
புரியாத பல நடக்கையில்
செய்த வினையே என்று உணரும் போது - நீ
உருவற்று அவதரித்து சிரிக்கையில்
என் ஆணவமெல்லாம் செத்தொழிந்ததைய்யா
சித்தம் பித்தமேறும் இன்பம்
அம்மை அப்பன் வடிவே
உனை தவிர ஒருவரையும்
இனி மனம் நாடாதே
நான் நானாக இருக்க மட்டும் அருள் புரிவாயய்யா
உருகாத மனமும் உருகும்
உனை நினைத்தால் என்பர்
விளையாட்டின் வேடிக்கை போல் சிரித்தேன்
புரியாத பல நடக்கையில்
செய்த வினையே என்று உணரும் போது - நீ
உருவற்று அவதரித்து சிரிக்கையில்
என் ஆணவமெல்லாம் செத்தொழிந்ததைய்யா
சித்தம் பித்தமேறும் இன்பம்
அம்மை அப்பன் வடிவே
உனை தவிர ஒருவரையும்
இனி மனம் நாடாதே
நான் நானாக இருக்க மட்டும் அருள் புரிவாயய்யா
பள்ளியில்
படைகளுக்கு பஞ்சமில்லை
கல்லூரியில்
கலாட்ட அரங்கேராத நாளில்லை
நாட்கள் கழிய நிலை மாறாத
மனிதனாய் வலம் வந்தான் - இவனை
பார்த்து நண்பர்கள் நகைக்க
கரம் பிடிக்க நினைத்த காதலியும் கைவிட
பெற்ற பெற்றோர் வருந்த
சுற்றத்தாரும் சொந்தமும்
வீட்டின் சுமை என கருத
நாணத்தின் உச்சியில்
வெட்கம் வர - அப்போது தான்
வாழ்க்கை புரிந்தது அவனுக்கு
படைகளுக்கு பஞ்சமில்லை
கல்லூரியில்
கலாட்ட அரங்கேராத நாளில்லை
நாட்கள் கழிய நிலை மாறாத
மனிதனாய் வலம் வந்தான் - இவனை
பார்த்து நண்பர்கள் நகைக்க
கரம் பிடிக்க நினைத்த காதலியும் கைவிட
பெற்ற பெற்றோர் வருந்த
சுற்றத்தாரும் சொந்தமும்
வீட்டின் சுமை என கருத
நாணத்தின் உச்சியில்
வெட்கம் வர - அப்போது தான்
வாழ்க்கை புரிந்தது அவனுக்கு
காதல் பயணம்
நினைவு பிந்தி பின் சென்றது
பேருந்து எதிர்காலம் நோக்கி செல்ல
உடல் நிலைத்து நிகழ்காலத்தில் நிற்க
நினைவு மட்டும் இறந்த காலத்தில் நீந்தியது
ஜன்னல் வழி காட்சி காட்ட - அவள்
தலை முடி என் முகம்
உரசிய சுவடு மாறவில்லை
என் ஐவிரல் இடுக்கில் - அவள்
நால் விரல் சேர இறுக்கி
மறவாதே என்றதும் மறக்கவில்லை
ஊரார் பார்ப்பது மறந்து - அவளை
ரசித்த நேரம் மறையவில்லை
தோல் சாய்ந்து
பார்த்த பார்வையின் ஏக்கம்
நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை
தோலும் தோலும் உரசி
அடி வயிற்றில் தோகை விரிந்ததை
தோண்டி புதைக்கவில்லை
தாய் மடியாய் தலை சாய்ந்தேன் - அவள்
காதலியாய் காது கடித்தது நினைவிலக்கவில்லை
நான் உச்சியில் இட்ட முத்தம்
அவளை மொத்தமாய் ஊமையாக்கி
கள்ளச்சிரிப்பு கொண்டது கலயவில்லை
வெட்கம் தாளாமல் தலை குனிந்து
என் மார்பில் இட்ட முத்தம் கரையவில்லை
வலக்கரம் கொண்டு முகம் தூக்க - அவள்
ஏக்கங்களை கண்ணில் காண்பித்தது அழியவில்லை
தொடாத பாகம் தொட
ஓட்டுநர்
நிருத்தியை தீடிரென்று அழுத்த
நிலை தடுமாறி ஒரு நிலைக்கு வந்து
அருகில் இருந்த இருக்கையை பார்த்தால்
யாரோ!!!
சிரித்துக் கொண்டு
உடலும் நினைவும் ஒன்று சேர
பயணமானோம் நிகழ்காலத்தில்
முதல் இரவு
வர்ணம் பூசி
மல்லி சூடி
ஓர விழியில்
எனை அழைக்கிறாள்
காணாது போல் நான்
காட்சி மற்ற
இருமலும் சிருமளுமாய்
எனக்கு உணர்த்தினாள்
தண்ணீர் வேண்டுமா? என நான் கேட்க
கண் திறந்து
கோபம் வெளி வர
எனை நோக்கி சென்றாள் - பின்
ஆறுதலாய் அரவணைக்க சென்றால்
முகம் காட்ட மறுத்து
சுவரை பார்த்திருந்தாள்
கரம் பிடித்தால்
காரணம் கேட்கிறாள்
நாடி தூக்கி முகம் பார்த்தால்
எனை நாடாதே என்கிறாள்
கன்னம் வருடினால்
தனை புரியாதவன் என்கிறாள்
இடை தொட்டால்
கடை விழியில் முரைக்கிறாள்
தோல் பற்றினால்
தேளாய் கொட்டுகிறாள் - அவள்
கோபம் கலைந்து
ஆடை கலைவதற்க்குள்
அப்பப்பா இந்த சுகம்
வாழ் நாளும் மறவாது
மல்லி சூடி
ஓர விழியில்
எனை அழைக்கிறாள்
காணாது போல் நான்
காட்சி மற்ற
இருமலும் சிருமளுமாய்
எனக்கு உணர்த்தினாள்
தண்ணீர் வேண்டுமா? என நான் கேட்க
கண் திறந்து
கோபம் வெளி வர
எனை நோக்கி சென்றாள் - பின்
ஆறுதலாய் அரவணைக்க சென்றால்
முகம் காட்ட மறுத்து
சுவரை பார்த்திருந்தாள்
கரம் பிடித்தால்
காரணம் கேட்கிறாள்
நாடி தூக்கி முகம் பார்த்தால்
எனை நாடாதே என்கிறாள்
கன்னம் வருடினால்
தனை புரியாதவன் என்கிறாள்
இடை தொட்டால்
கடை விழியில் முரைக்கிறாள்
தோல் பற்றினால்
தேளாய் கொட்டுகிறாள் - அவள்
கோபம் கலைந்து
ஆடை கலைவதற்க்குள்
அப்பப்பா இந்த சுகம்
வாழ் நாளும் மறவாது
தமிழ்
அரசன் அரவணைப்பிலும்
புலவர் புகழிலும்
சதியின்றி சங்கத்தில் வளர்ந்தவள்
தொடர்புக்கு தோன்றியவள்
தோகைவிரித்தாடுகிறாள்
பழமை மரபு மறவா
அறவழி நடத்தி செல்பவள்
அஞ்சாமை கொள்கை பரப்புபவள்
நட்புறவு நாடி வருவோர்
நல்லவரெனில் 'பிசிர்' போல் உயிர் தருபவள்
பழிவாங்கும் பண்பை
பாசறையிலும் கல்லாதவள்
இடையூர் ஆயிரம் வந்தாலும்
பேர் இடியாய் இடித்து
மின்னலாய் தகர்ப்பவள்
எளிதில் பகைமை கொள்ளாமல்
பாச வலை வீசுபவள்
மாற்றார் கருத்துக்கு
கருத்துன்மை காண
கனிவுடன் செவி சாய்பவள்
உரிமை என்றால்
உறவறுத்து உரை வாள் ஏந்துபவள்
வஞ்சனையுடன் வருபவர் வறியர் என்றால்
வாகை சூட வைத்து அழகு பார்ப்பவள்
பழி வருமெனில்
தாலி கழற்றி எறிபவள்
ஆத்திகனோ நாத்திகனோ
திராவிட உணர்வு வேண்டுபவள்
வீல் என்று கதறி வரும் பிள்ளையை
வீரமாய் வளர்ப்பவள்
விவேக வேதியலை
கற்றுக் கொடுப்பவள் - எனவே
வீரத்திற்கும் விவேகத்திற்க்கும் பஞ்சமில்லை
போவது தன்மானமெனில்
துறப்பது உயிர் என்றிருப்பவள்
தன் குணத்தை தாங்கி வரும்
தமிழனின் வாழ்வு கண்டு
தலை நிமிர்ந்து நடைபோடுபவள்
அரசாட்சியில் அரியணை ஏறியவள்
மக்களாச்சியிலும் மணம் வீசுகிறாள் - எனவே
வரலாற்றை மிஞ்சுபவள் என்போம்
மலையில்...
கிழவன் கூற்று
முதலிரவில் துரியோதனன் வேலை பார்க்கணும்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மாட்டி என்பாங்க - அவளுக்கு
மோகத்தீ வளரும் போது
ஆசை கொண்டு அணைக்க வேண்டும்
அலுத்து எழும் நேரம்
கூப்பிட்டால் போக வேண்டும் - இல்லையேல்
காரணமில்லா சண்டை
பண சண்டை
மன சண்டை
மறுநாள் மதிய சாப்பாட்டுடன் முடியும்
இச்சண்டை இச்சை தீரும் வரை வளரும்
நம் உயிர் செலவில்
பிள்ளைகளுக்கு சொத்து வரவு வேண்டுவாள்
எல்லாம் இளமையின் பாதுகாப்பில்
காலம் கடத்த
ஆண்பிள்ளைக்கு
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் "
பெண்பிள்ளைக்கு
"ஆசை ஆயுளுள்ளவரை
மோகம் மேனியழியும் வரை"
கணவன் மனைவி மனஸ்தாபத்திற்கு
கட்டிலில் இடைவெளியே காரணம்
கட்டி புரண்டால் அன்பு தானா வரும்
அலுத்து எழுங்கள்
சலித்து எழாதீர் - எழுந்தால்
நீ சம்சாரம் துறந்த சந்நியாசி
கணவன் கூற்று
ஆசியும் ஆதரவும் வேண்டிய பெற்றோரால்
பாச வாளால் துரத்தப்பட்டோம் - வழியின்றி
நால்வர் சூழ நால்வேதங்கள் ஓதின
நகையாடி விளையாடி பழகியவள்
நாணம் கொண்டாள்
மாலை பொழுதின் விடியல்
இவள் விழியில் புலர்கிறது
ஆகாரம் ஊட்டினாள்
மஞ்சள் மணம் கமல
மஞ்சத்தில் மல்லியாய் உதிர்ந்தாள் - இவ்வாறு
இன்பத்தின் இயற்கையாய் இருந்தவள்
நீலிக்கண்ணீரில் காரியம் சாதிக்கிறாள்
வீண் வம்பு தொடுத்து
வெட்டி கௌரவம் பூணுகிறாள்
கோபங்களை குழந்தை மேல் வீசுகிறாள்
'போதுமடா புற்றீசல் வாழ்க்கை' என புலம்பவிடுகிறாள்
'அழகு பதுமையின் நெஞ்சுக்குழி
படுபயங்கர பாதாள இடுகுழி
இமை மூடும் போது
விழிகள் எதை காண்கிறதோ - அதுபோல
பெண்கள் மணம் விளங்காததே' என புரிகிறது
காதலன் கூற்று
நாணத்தில் ஒழிந்து
உண்மை முகம் மறைத்து
மோக முகம் காட்டும்
தேய்பிறை நிலவே!
நீ என் காதலி
நாணம் விலகி
மோக முகம் குறைய
உண்மை முகம் காட்டும்
வளர்பிறை நிலவே !
நீ என் மனைவி
முன்பு அடங்கியவள்
அடக்க முயல்கிறாள்
அடங்கினால்
அடிமையாய் திரிவேன்
அடக்கினால்
ஆண்பிள்ளையாய் வலம் வருவேன்
அடங்கியும் அடக்கினால்
சந்தோசமாக வாழ்வேன்
உண்மை முகம் மறைத்து
மோக முகம் காட்டும்
தேய்பிறை நிலவே!
நீ என் காதலி
நாணம் விலகி
மோக முகம் குறைய
உண்மை முகம் காட்டும்
வளர்பிறை நிலவே !
நீ என் மனைவி
முன்பு அடங்கியவள்
அடக்க முயல்கிறாள்
அடங்கினால்
அடிமையாய் திரிவேன்
அடக்கினால்
ஆண்பிள்ளையாய் வலம் வருவேன்
அடங்கியும் அடக்கினால்
சந்தோசமாக வாழ்வேன்
சங்க கால மூவர்
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர்
சிவபுகழ் வளர்த்தனர்
எங்கள் கால மூவர்
பெரியார் அண்ணா கருணாநிதி
திராவிட உணர்வை வளர்த்தனர்
இவர்கள் வழியில்
தமிழகம் செழிக்க
கங்கை இந்துமாகடல் சேர வேண்டும்
சேது கால்வாயில் கப்பல் நீந்த வேண்டும்
சித்த மருத்துவம் முதன்மை பெற வேண்டும்
அறிவியல் நடப்பு முறையறிந்து
செயல் திட்டம் தீட்ட வேண்டும்
ஏர் உழும் கிழவன்
உண்டு ஏப்பம் விட வேண்டும்
விவசாயம் அறியாத தமிழன்
ஒருவரும் இலர் என்ற நிலை வேண்டும்
கைத்தொழிலை
கட்டாய பாடமாக்க வேண்டும்
மன உறுதிக்கு பள்ளியில் தியானம்
நடைமுறை படுத்த வேண்டும்
ஊழல் ஊற்றை
காலால் மிதித்திட வேண்டும்
சாதி என்னும் சாக்கடை புழுவை
மருந்தடித்து அழித்திட வேண்டும்
தமிழ் திராவிட உணர்வை
பிறப்பிலிருந்து ஊட்டிட வேண்டும்
மானம் பெரிதென உணர்த்திட வேண்டும்
வேண்டுவென வேண்டி விடைபெறுகிறேன்
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர்
சிவபுகழ் வளர்த்தனர்
எங்கள் கால மூவர்
பெரியார் அண்ணா கருணாநிதி
திராவிட உணர்வை வளர்த்தனர்
இவர்கள் வழியில்
தமிழகம் செழிக்க
கங்கை இந்துமாகடல் சேர வேண்டும்
சேது கால்வாயில் கப்பல் நீந்த வேண்டும்
சித்த மருத்துவம் முதன்மை பெற வேண்டும்
அறிவியல் நடப்பு முறையறிந்து
செயல் திட்டம் தீட்ட வேண்டும்
ஏர் உழும் கிழவன்
உண்டு ஏப்பம் விட வேண்டும்
விவசாயம் அறியாத தமிழன்
ஒருவரும் இலர் என்ற நிலை வேண்டும்
கைத்தொழிலை
கட்டாய பாடமாக்க வேண்டும்
மன உறுதிக்கு பள்ளியில் தியானம்
நடைமுறை படுத்த வேண்டும்
ஊழல் ஊற்றை
காலால் மிதித்திட வேண்டும்
சாதி என்னும் சாக்கடை புழுவை
மருந்தடித்து அழித்திட வேண்டும்
தமிழ் திராவிட உணர்வை
பிறப்பிலிருந்து ஊட்டிட வேண்டும்
மானம் பெரிதென உணர்த்திட வேண்டும்
வேண்டுவென வேண்டி விடைபெறுகிறேன்
கலைஞருக்கு......
அண்ணா பாராட்டி
தனித்தன்மையாய் மணம் வீசும்
குவளை மலரே!
இங்கோ? அங்கோ? எங்கோ?
எங்கள் "கோ" என்று தேடுகையில்
இருள் நீங்க
காலை பகலவனாய் உதித்த
உதய சூரியன் நீ
போர்வைக்குள் பதுங்காமல்
போர்க்களம் தேடித்தேடி
வென்றவன் நீ
தடியடி பெற்று
வள்ளுவன் சமைத்த தமிழுக்கு
செம்மொழி கனி
படைத்தவன் நீ
துரோகங்கள் வஞ்சனைகள்
ஆயிரம் கண்டு
அதை அனைத்தையும்
துடுப்பாய் கொண்டவன் நீ
உனை பார்த்து வாரிசு
அரசியல் நடத்துகிறான் என்கின்றனர்
வரியவருக்கு வாரி இசையும்
அரசியல் நடத்துபவன் நீ
சாதிகள் சங்கமிக்கும்
சமுத்திரம் நீ
திராவிடராகிய எங்களின்
கருப்பு கண்ணாடி அணிந்த
கர்ணன் நீ
எளியோர் வாடுகையில்
கரம் நீட்டிக்காக்கும்
வலுக்கை உடையவன் நீ
நெட்டையனை நம்பினாலும்
குள்ளனை நம்பாதே - இது பழமொழி
சாத்திரங்களை பொய்யாக்கும்
இந்த குள்ளனை நம்பித்தான்
இந்த தமிழினமே
நீ என்னினத்தின் இதயத்துடிப்பு
உன் ஓய்வு அன்று
தமிழினத்தின் மரணம்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இது பிறர் கூற்று
என் மட்டில்
நீ வயதான வாலிபனே
வாழ்க நீ பல்லாண்டு
முதல் பின்னிரவு
பூக்கள் நசுங்கி
ஒரு போராட்டம்
நடந்த களைப்பில்
ஆடைகள் அவிழ்த்து
காற்று புகா நெருக்கம் கொண்டு
காலை பனித்துளி போல்
உடலெங்கும் வியர்வை தளைத்திருக்க
கணவன் மனைவியிடம்
"பாலுண்டேன் தேனுண்டேன்
இரண்டும் கலந்துகொண்டேன்
இன்று உண்டா தெவிட்டாத
உணவை உண்டதில்லை" என்றான்
அவள் கூச்சத்துடன் சிரித்து
முகம் திருப்பினாள்
விடுவானோ இவன்
தன் விரல்களால்
கன்னங்களை தடவி திரும்பச் செய்தான்
"மோக பார்வையாலும்
மெல்லிய சிரிப்பாலும்
எனை தோற்க்கடித்தாயடி" என்றான்
"தோற்றது நானே" என்றாள்
"அன்பே உன் முகம்
இந்த இரவிலும் சந்திர ஒளியை
மிஞ்ச காரணம் என்ன? " வினவ
"இந்த சூரியகிரகணம் தான்
காரணம்" என்றாள்
"உனை வர்ணிக்க ஆசையாய்
உள்ளேன் அனுமதி கிடைக்குமா? " என்றான்
அமைதியாய் ஆர்ப்பாட்டம்
செய்யத்தெரிந்த உங்களுக்கு
அனுமதி என்னிடம் எதற்கு?" என்றாள்
"கண்ணே வில்லின் உட்புறமாய்
அழகாய் செதுக்கப்பட்ட இடையில்
இருக்கின்ற காலம் வரை
என் இரு(க்)கை அதில் தான்"என்றான்
"வேண்டாம் வினையின் விளைவரியாரே?" என்றாள்
மோகப்பார்வையால்
காமந்தனை கடந்து
கலப்படமற்ற காதலை பெற்று
மனக்காயங்களை உற்று
நேரம் கழிந்தது
மார்பெனும் மண்டபத்தில்
தன் தலை சாய்த்து
"உமை அறிய ஓர் இரவு போதுமோ?
என் உள்ளங்கவர்ந்த கள்வனானாய்" என்றாள்
"மொழிகளில் தேன் தெளிக்கும்
வித்தையை எங்கு கற்றாயோ?
இந்த இனிய சொற்களில்
தலை கிறுகிறுத்து போனேனடி" என்றான்
வெட்கம் தலைக்கேற முகம் மூடினாள்
"அழகே" என்றழைத்து
தன் விரல்களால் அவள் விரல் தொட்டு
"உன்னிடம் ஆயுள் கைதியாகிய நான்
இந்த விரல் சிறையிலிருந்து
என்னழகை மீட்பது எப்படியோ? என்றான்
சூரியரை பார்த்த பனித்துளியாய்
காலை மலரும் மொட்டாய்
இளந்தென்றலில் அசையும் செடியாய்
தத்தித்தத்தி நடை பழகும் குழந்தையாய்
அவள் முகம் காட்ட மெய்மறந்தான்
புன்னகை செய்து புன்னகை செய்து
இருவரும் மனம் தனை திறந்தனர்
முன்னடந்தவையும்
பின் செய்வது என்ன? பேசுகையில் - இளந்தென்றல்
மேனி மீது பட இருவருள்ளும் மோகமுள் பாய்ந்ததே
"என் உயிரே எப்போதும்
இந்த 'இடைவிடா' அன்பு நிலைத்திருக்க
நம்முள் மனக்கசப்பு வராமலிருக்க
நாம் நல்வாழ்வு வாழ..."சொல்வதரியாது திகைத்தான்
"எப்போதும் நீங்கள் வேண்டும்" என்று முடித்தாள்
விழிகளால் அவளை அருகில் அழைத்தான்
தன் விரல்களை அவள் மேனியெங்கும் ஓடவிட்டான்
கூச்சம் தாளாமல் தாவி கட்டி அணைத்தாள்
மதிமுகம் தூக்கி சங்குகழுத்தில் முத்தமிட்டான்
காதில் படர்ந்திருந்த முடியை நீக்கி உஸ்னமூச்சிட்டான்
செய்வதறியாது இன்னும் இறுக அணைத்தாள்
காதோரமாய் அவன்
"பெண்ணே! தீயோன் நல்லாள் மேனி தீண்டவே
கூச்சம் பரவும் முன் தீ பரவுமோ? என்றான்
"ஆம்! தீயோனேன்றால் தீயாய் மாறுவாள் பெண்" என்றாள்
"நான் உனை தீண்டும் போது
தீ பரவவில்லையே! எனை கள்வன் என்றாயே?" என்றான்
சிரித்தபடி"அத்தான், மனங்கவர் கள்வன் வேறு
மாந்தர் கவர் கள்வன் வேறு.
நிருபித்துவிட்டீர் நீர் மனங்கவர் கள்வனென்று" என்றாள்
பொழுது புலர்ந்தது
இருவரும் ஏக்கப்பார்வையால்
"பகல் போய் இரவு வா" என்றழைத்தனர்
விண்ணை பிளக்கும்
இடியோசையை மிஞ்சும்
எம்மக்களின்
தாகக் குரல்
மேனி நனைந்து வருடமாகுது
கண்ணீர் ஊறி மாதமாகுது
வாய் உலர்ந்து நாளாகுது - மொத்தத்தில்
அனைவரும் நடை பிணமானோமே
பஞ்சாங்கம் பார்க்கும்
பாட்டி கூட
பஞ்சாப்பிலிருந்து தண்ணீர்
எப்போது என்றுருக்கிறாள்
ஆறு வழியோடி எமையடைய வழியில்லை
ஆஸ்தி கோடி இருந்தும் வாழ நீரில்லை
இதை கூற நாவில் ஈரமில்லை
எமை காப்போர் யாருமில்லை
இடியோசையை மிஞ்சும்
எம்மக்களின்
தாகக் குரல்
மேனி நனைந்து வருடமாகுது
கண்ணீர் ஊறி மாதமாகுது
வாய் உலர்ந்து நாளாகுது - மொத்தத்தில்
அனைவரும் நடை பிணமானோமே
பஞ்சாங்கம் பார்க்கும்
பாட்டி கூட
பஞ்சாப்பிலிருந்து தண்ணீர்
எப்போது என்றுருக்கிறாள்
ஆறு வழியோடி எமையடைய வழியில்லை
ஆஸ்தி கோடி இருந்தும் வாழ நீரில்லை
இதை கூற நாவில் ஈரமில்லை
எமை காப்போர் யாருமில்லை
சுனாமி
ஆபத்து தான்
சக்கரமோ?
அலையோ?
கடற்கரையில்
அசிங்கங்கள் தாங்காமல்
ராட்சஷா அலையால்
உலகை எச்சரித்தாயோ?
கால் முளைத்த
கவிதை என
வர்ணிக்கப்பட்ட குழந்தைகள்
என்ன செய்தனவோ?
முதியோர்கள் கயவரல்லார்
என்ன செய்தனரோ?
இவர்கள் கடலில் கலக்க
காரணம் என்னவோ?
பிள்ளை அழுதால்
பால் கொடுக்கும் தாய்
இன்று
குழந்தைக்காக அழுகிறாள்
விளையாட சென்ற பிள்ளைகளை
வீடு திரும்ப செய்யாமல் செய்த
வினையின்
விளையாட்டைப் பார்த்தால் பயங்கரம்
காலையில் ஊடல் கொண்டு
மாலையில் மதி மயங்கி
மஞ்சம் தேடியோர் - இன்று
தனியே வாடுகின்றனர்
உடற்பயிற்சி செய்தவர்களின்
உடையற்ற உடலை
இன்று
கடற்கரை மணலில் கண்டெடுக்கிறார்கள்
இயற்கையை காலையில்
ரசிக்க வந்தவர்கள் எல்லாம்
இயற்கையோடு
இறுதிப்பயணம் மேற்கொண்ட கொடூரம்
பாத சுவடுகளை மட்டும்
கரைத்துக் கொண்டு இருந்தாய் - இப்போது
பாதங்களோடு
கொண்டு சென்றாய்
கடலின் உப்பு
இனி
அதிகரிக்கும்
எங்களின் கண்ணீரால்
கடற்கரை
இனி
எங்களின் சோகம் பாடும்
மயான கரை
தாயிழந்து தந்தையிழந்து
நிற்கும் பிள்ளை
இனி
படிக்குமோ? பிச்சை எடுக்குமோ?
மக்களைப் பெற்றெடுத்து
மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள்
இனி
முதியோர் இல்லமோ? பிச்சை எடுப்பாரோ?
வீடு இழந்தால் கட்டிக் கொள்வோம்
சொத்திழந்தால் பெற்றுக் கொள்வோம்
இங்கு
தாலி இழந்து நிற்கும் பெண்களின் கதி என்னவோ?
இவர்களுக்கு உதவ
ஊர் ஊராய் திரளும்
மனிதநேயம் கொண்ட மக்களின் பாதம்
தொட்டு வணங்குகிறேன்
பறவை சிந்தும்
பழம் தான்
மரத்தின் மூலம்
காற்றில் உதிர்கின்ற
இலையும் மலரும்
மண்ணின் உரம்
பயனில்லாத
மொட்டை பனைமரம் தான்
கரையான் வீடு
தேவையில்லா பொருள் என்று
நினைத்தவை எல்லாம்
ஒரு வகையில் எதற்காவது பயன்படும்
மனிதனுக்கு மட்டும்
பயன்பட்ட பழைய மொழி
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
அனைத்துயிருக்கும்
பயன்படும் புது மொழி
"சிறு கரும்பும் எறும்புக்கு உணவாகும்
எறும்பு கரும்புக்கு உரமாகும் "
பழம் தான்
மரத்தின் மூலம்
காற்றில் உதிர்கின்ற
இலையும் மலரும்
மண்ணின் உரம்
பயனில்லாத
மொட்டை பனைமரம் தான்
கரையான் வீடு
தேவையில்லா பொருள் என்று
நினைத்தவை எல்லாம்
ஒரு வகையில் எதற்காவது பயன்படும்
மனிதனுக்கு மட்டும்
பயன்பட்ட பழைய மொழி
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்"
அனைத்துயிருக்கும்
பயன்படும் புது மொழி
"சிறு கரும்பும் எறும்புக்கு உணவாகும்
எறும்பு கரும்புக்கு உரமாகும் "
சிலரின் உறவு
வாய் வார்த்தைகளில்
ஆபத்தெனில்
வாய்மூடி பறப்பர்
ஆதாரங்கள் எல்லாம்
ஆதாயத்திற்காக சேகரிப்பர்
சட்டி சோறு தின்றாலும்
நன்றி மறப்பர்
உயர்வை பார்த்து
வயிற்றில் எருச்சல் கொள்வர்
தாழ்வை பார்த்து
அகம்தனில் மகிழ்வர்
முகஸ்துதி பாடி
சுற்றி பள்ளம் பறிப்பர்
எதிர்ப்புகளை
உருவாக்குவதில் வல்லவர்
இவர்களின் சம்பாத்தியமே
புறங்கதையில் தான்
கும்பகோணத்தின் தீ (16/7/2004)
கண்விழிப்பில் என்னென்ன எதிர்பார்ப்போ?
தாயின் மார்பு சூட்டிலும்
அடிவயிற்று அனலிலும்
குளிர்காய்ந்த பிள்ளைகள்
ஆடி மாதத்தில்
அடிவயிறேரிய தீக்கிரையானரே
தந்தையின் பாசத்தில்
வழுக்கி நடை பயின்ற பிள்ளைகள்
தப்பி பிழைக்க முன்டியடித்தனரே
காலையில் டாட்டா சொல்லிச் சென்ற பிள்ளைகள்
வாழை இலையில் துன்புருகின்றனரே
கல்வி பயில பள்ளிக்கு சென்ற பிள்ளைகள்
பாடையில் வீடு திரும்பினரே
ஐயகோ!
கனிமொழி பேசி
பல ஆசைகள் நெஞ்சில் புதைத்த பிள்ளைகள்
கரிக்கட்டைகளாய் மண்ணில் விதைக்கப்பட்டனரே
இந்த பிஞ்சுகளை பார்க்கையில்
நெஞ்செனும் பஞ்சு கருகுகிறதே
நண்பர்களே!
கோபம் வேண்டாம்
காதலுக்கு எதிரியல்ல
உணர்ச்சிபூர்வ காதல் வேண்டாம்
உணர்வுபூர்வ காதல் கொள்
காதலியை காதலிக்கும் முன்
காதலை காதலிக்க கற்றுக்கொள்
காதலின் ஆழம் புரிந்து
கால் எடுத்து வை
புனிதமான காதலுக்கு
புத்தன் அன்பு என்று பெயரிட்டான்
புத்தனுக்கு காதல் வந்ததால்
புத்தமதம் உண்டானது
இந்த காதல் எங்கே?
இன்றைய காதல் எங்கே?
உன் காதலால்
நீயும் பிறரும் வாழ வேண்டும்
கோபம் வேண்டாம்
காதலுக்கு எதிரியல்ல
உணர்ச்சிபூர்வ காதல் வேண்டாம்
உணர்வுபூர்வ காதல் கொள்
காதலியை காதலிக்கும் முன்
காதலை காதலிக்க கற்றுக்கொள்
காதலின் ஆழம் புரிந்து
கால் எடுத்து வை
புனிதமான காதலுக்கு
புத்தன் அன்பு என்று பெயரிட்டான்
புத்தனுக்கு காதல் வந்ததால்
புத்தமதம் உண்டானது
இந்த காதல் எங்கே?
இன்றைய காதல் எங்கே?
உன் காதலால்
நீயும் பிறரும் வாழ வேண்டும்
இதயமெனும் இருட்டறையில்
இரத்த ஊற்றாய்
இசையெனும் உணர்வாய்
காணாத கடவுளின் உருவாய் - இப்படி
காதலுக்கு கவிஞர்கள் சில கோடி
ஊரெங்கும் தேடி
உறவாய் நாடி
விழிகள் மூடி
எண்ணங்கள் ஓடி
சிந்தையில் கனவில் பாடி - இப்படியும்
காதலுக்கு கவிஞர்கள் பல கோடி
கோடி கோடியாய் கவிதை பாடி
காதலை வாழவைக்கும் கவிஞர்களே!
காதல் ஒன்று தான் உலகில் உள்ளதோ?
காதலை தவிர வேறொன்றும் உள்ளத்தை தொடவில்லையோ?
ஒரு வேலை சோற்றுக்கு மனிதன்
பாலுக்கு அழும் மழலை பார்த்ததில்லையோ?
விபச்சார ஒழிப்பு
மதுவிலிருந்து விடுதலை
திருட்டை திருட வழிமுறை
நல்லொழுக்கப் பாதையில் மனிதன்
இவற்றில் சிந்தையில்லையோ ?
இரத்த ஊற்றாய்
இசையெனும் உணர்வாய்
காணாத கடவுளின் உருவாய் - இப்படி
காதலுக்கு கவிஞர்கள் சில கோடி
ஊரெங்கும் தேடி
உறவாய் நாடி
விழிகள் மூடி
எண்ணங்கள் ஓடி
சிந்தையில் கனவில் பாடி - இப்படியும்
காதலுக்கு கவிஞர்கள் பல கோடி
கோடி கோடியாய் கவிதை பாடி
காதலை வாழவைக்கும் கவிஞர்களே!
காதல் ஒன்று தான் உலகில் உள்ளதோ?
காதலை தவிர வேறொன்றும் உள்ளத்தை தொடவில்லையோ?
ஒரு வேலை சோற்றுக்கு மனிதன்
பாலுக்கு அழும் மழலை பார்த்ததில்லையோ?
விபச்சார ஒழிப்பு
மதுவிலிருந்து விடுதலை
திருட்டை திருட வழிமுறை
நல்லொழுக்கப் பாதையில் மனிதன்
இவற்றில் சிந்தையில்லையோ ?
அறிவியல் நிறைந்த உலகில்
அவசர வாழ்வு வாழும் மனிதர்கள்
உள்ளத்தில் உண்மைதனை புதைத்து
நகையாடி பொய் நட்பு வளர்க்கிறார்கள்
நாடி வருபவரிடம் நடித்து கைநீட்டுகிறார்கள்
பசி என்றவர்களிடம் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்
ரத்த பாசமே ரத்தம் பார்க்கும் காலம் - முன்பு
பேய் கதை சொல்லி
பேயை உருவாக்கி பயம் வந்தது - இன்று
நள்ளிரவில் திருடர்களால் உறக்கம் போகிறது
நோயும் பயமும் வளர்கிறது
பொய் கதை சொல்லி
பயம் வந்த காலத்தில் கூட
உயிருக்கு உத்திரவாதம் இருந்தது - ஆனால்
இந்த ஜனநாயகத்தில்...
அவசர வாழ்வு வாழும் மனிதர்கள்
உள்ளத்தில் உண்மைதனை புதைத்து
நகையாடி பொய் நட்பு வளர்க்கிறார்கள்
நாடி வருபவரிடம் நடித்து கைநீட்டுகிறார்கள்
பசி என்றவர்களிடம் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்
ரத்த பாசமே ரத்தம் பார்க்கும் காலம் - முன்பு
பேய் கதை சொல்லி
பேயை உருவாக்கி பயம் வந்தது - இன்று
நள்ளிரவில் திருடர்களால் உறக்கம் போகிறது
நோயும் பயமும் வளர்கிறது
பொய் கதை சொல்லி
பயம் வந்த காலத்தில் கூட
உயிருக்கு உத்திரவாதம் இருந்தது - ஆனால்
இந்த ஜனநாயகத்தில்...
அதிகாலை பூமிக்கிறங்கும் பனித்துளியாய்
புனிதனாய் தோன்றிய மனிதரே
புழக்கத்திற்கு நீ தோற்றுவித்த நாணயம்
இன்று நாணயமிழந்து தவிக்கிறது
பண்டம் மாற்றும்முறை
பணம் மற்றும்முறையாய் லஞ்சமாய்
நாடெங்கும் தலை விரித்தாடுகிறது
இதுபோக காசுக்காக
காதல் கல்யாணம் கருமாதி கூட
தோற்றம் என்றாலே
பிரச்சனைதானோ ?- அது
மனிதனோ? பணமோ?
புனிதனாய் தோன்றிய மனிதரே
புழக்கத்திற்கு நீ தோற்றுவித்த நாணயம்
இன்று நாணயமிழந்து தவிக்கிறது
பண்டம் மாற்றும்முறை
பணம் மற்றும்முறையாய் லஞ்சமாய்
நாடெங்கும் தலை விரித்தாடுகிறது
இதுபோக காசுக்காக
காதல் கல்யாணம் கருமாதி கூட
தோற்றம் என்றாலே
பிரச்சனைதானோ ?- அது
மனிதனோ? பணமோ?
தனிமையில் வாடும் மீராவே வருந்தாதே
உனக்காக கண்ணன் என்றும் உண்டு
பாடல்கள் பாடி
தம்புரா மீட்டி
கண்ணனுக்கு புரியாத மொழிகள் எதற்கு?
நீ சொல்லும் மொழி
அவனுக்கு புரிந்ததோ என்னவோ?
அவனுக்கு புரிந்த தெரிந்த
மொழிகளில் பேசினால் போதுமே!
நீ அவன் பின்னால் என்பது
அவன் உன் பின்னால் என்று மாறுமே
அவன் வருவான் என்று காத்திருந்து
காலம் கடத்தாதே
பழைய புராண கதையை கிழித்து
புதிய புராணம் நீ படிக்க வேண்டும்
உனக்காக கண்ணன் என்றும் உண்டு
பாடல்கள் பாடி
தம்புரா மீட்டி
கண்ணனுக்கு புரியாத மொழிகள் எதற்கு?
நீ சொல்லும் மொழி
அவனுக்கு புரிந்ததோ என்னவோ?
அவனுக்கு புரிந்த தெரிந்த
மொழிகளில் பேசினால் போதுமே!
நீ அவன் பின்னால் என்பது
அவன் உன் பின்னால் என்று மாறுமே
அவன் வருவான் என்று காத்திருந்து
காலம் கடத்தாதே
பழைய புராண கதையை கிழித்து
புதிய புராணம் நீ படிக்க வேண்டும்
நடித்த நாடகங்களெல்லாம் போது
நாகரிக போர்வையில் நடமாடும்
நவநாகரிக பிணமா நீ?
நகைக்கும் போது
அகநகையில் அழுகை எதற்கு?
அமைதியாக இருந்த மனதில்
அனுமதியின்றி அழுக்கை புகட்டுவது எதற்கு?
மானமுள்ள மனிதா!
மாண்டு போன மரபுகளிலிருந்து வெளிவா
மஞ்சத்திலே மாயயை விட்டுவா
மகத்தான மனப்பான்போடு நடந்துவா - எல்லாமே
ஏக்கங்களின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது
நாகரிக போர்வையில் நடமாடும்
நவநாகரிக பிணமா நீ?
நகைக்கும் போது
அகநகையில் அழுகை எதற்கு?
அமைதியாக இருந்த மனதில்
அனுமதியின்றி அழுக்கை புகட்டுவது எதற்கு?
மானமுள்ள மனிதா!
மாண்டு போன மரபுகளிலிருந்து வெளிவா
மஞ்சத்திலே மாயயை விட்டுவா
மகத்தான மனப்பான்போடு நடந்துவா - எல்லாமே
ஏக்கங்களின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது
பத்து நிமிடம் செதுக்கி
பத்து மாதம் மெருகூட்டிய
சிற்பம் நீ !
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
மண்ணியலை விட
விண்ணியலை விட
உன்னியலை அறிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
கயிறில்லா காளையை போல்
காதல் வெறி கொள்ளாமல்
கண்மூடிக் கிடக்கும் - உன்
திறமையை அவிழ்த்து விட
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
தானம் கேட்டு வந்தோருக்கு
தாமதமும் தயக்கமும்மின்றி
ஈன்று ஈன்று செங்கை கொண்டு
ஈகை புரிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
இவை உன்னிடத்திலிருந்தால்
வாகை வகை வகையாய்
உனை அலங்கரிக்கும்
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
பத்து மாதம் மெருகூட்டிய
சிற்பம் நீ !
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
மண்ணியலை விட
விண்ணியலை விட
உன்னியலை அறிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
கயிறில்லா காளையை போல்
காதல் வெறி கொள்ளாமல்
கண்மூடிக் கிடக்கும் - உன்
திறமையை அவிழ்த்து விட
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
தானம் கேட்டு வந்தோருக்கு
தாமதமும் தயக்கமும்மின்றி
ஈன்று ஈன்று செங்கை கொண்டு
ஈகை புரிய
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
இவை உன்னிடத்திலிருந்தால்
வாகை வகை வகையாய்
உனை அலங்கரிக்கும்
வா நண்பா வா
வாகை சூட
வா நண்பா வா
தாய் பாசம்
Sep 16, 2009
மரண வாக்குமூலம்
கர்பவாசல் வழி வந்த போதே
காற்று சொன்ன செய்தி இது
வாரி எடுத்து வாகை சூட
வாசலில் வருவான் காலனென்று
யாருமில்லை நினைவில்
மனதோடு மரண ஓலங்கள் மட்டுமே
மனப்புதையல் மாயரூபம் கொண்டு
கண்ணுக்கும் காலனுக்கும் நடுவிலாடுது
உயிர் சொல்லொன்று தொண்டைக்குழியில் சிக்கியது
வெளிவர முயற்சித்த வார்த்தை
மூடியிருந்த பின் வாசலை திறந்தது
வாசல் வழி மலம் சிந்தி மரணமெய்தேன் - நான்
உயிர் பெற்றதும் கொடுத்ததும் முன் வாசலில் - என்
உயிர் பிரிந்தது பின் வாசலிலே
காற்று சொன்ன செய்தி இது
வாரி எடுத்து வாகை சூட
வாசலில் வருவான் காலனென்று
யாருமில்லை நினைவில்
மனதோடு மரண ஓலங்கள் மட்டுமே
மனப்புதையல் மாயரூபம் கொண்டு
கண்ணுக்கும் காலனுக்கும் நடுவிலாடுது
உயிர் சொல்லொன்று தொண்டைக்குழியில் சிக்கியது
வெளிவர முயற்சித்த வார்த்தை
மூடியிருந்த பின் வாசலை திறந்தது
வாசல் வழி மலம் சிந்தி மரணமெய்தேன் - நான்
உயிர் பெற்றதும் கொடுத்ததும் முன் வாசலில் - என்
உயிர் பிரிந்தது பின் வாசலிலே
மனதின் உருவம்
என் கண்ணீருக்கு
உன் இதழ் சுவை ஞாபகம் வந்ததோ
ஓயாத அலையென கன்னங்களை சுவைக்கிறதே
வியந்து உன்னித்து பார்த்தால்
நீ பதித்த இதழ் வரிகளின்
இடைவெளியில் வழிந்தது என் கண்ணீர்
மனதின் உருவம் தானே கண்ணீர்
உன் இதழ் சுவை ஞாபகம் வந்ததோ
ஓயாத அலையென கன்னங்களை சுவைக்கிறதே
வியந்து உன்னித்து பார்த்தால்
நீ பதித்த இதழ் வரிகளின்
இடைவெளியில் வழிந்தது என் கண்ணீர்
மனதின் உருவம் தானே கண்ணீர்
நீயும் வாழ்க
உயிர் வாழ்வதற்கு
காதலை கல்லறையில் புதைத்தாய்
காகிதங்கள் சொல்லும் காயத்தை
கவிதை வடிவிலே
உனை இழந்தேன்
நல்வாழ்வை பெற்றேன்
உனை பெற்றிருந்தால்
வாழ்வை இழந்திருப்பேன்
காதலெனும் பொய்யுரைத்து
காயப்படுத்தி கலங்கச் செய்து
காணாமல் போன கனவே
இந்த உலகில் நீயும் வாழ்க
காதலை கல்லறையில் புதைத்தாய்
காகிதங்கள் சொல்லும் காயத்தை
கவிதை வடிவிலே
உனை இழந்தேன்
நல்வாழ்வை பெற்றேன்
உனை பெற்றிருந்தால்
வாழ்வை இழந்திருப்பேன்
காதலெனும் பொய்யுரைத்து
காயப்படுத்தி கலங்கச் செய்து
காணாமல் போன கனவே
இந்த உலகில் நீயும் வாழ்க
பேசிய கவிதை
கோட்டு சூட்டு போட்டு வரும் ராசா
கம்ப்யூடர் திண்ண காடு மேடு பாக்க வந்திங்கலாக்கும்?
இல்ல இல்ல
ஆங்கிலம் புகுந்த கிராமத்து மனிதன பாக்க வந்தேனுங்க.......
கம்ப்யூடர் திண்ண காடு மேடு பாக்க வந்திங்கலாக்கும்?
இல்ல இல்ல
ஆங்கிலம் புகுந்த கிராமத்து மனிதன பாக்க வந்தேனுங்க.......
ஒரு தந்தையின் குரல்
எங்கள் வீட்டின் முதல் இறப்பு
வீட்டில் ஒருவனாய் இருந்தவன்
இன்று ஒதிங்கி சென்றுவிட்டான்
எங்களின் பாசம் புரியாது உங்களுக்கு
கண்களால் பேசி காதல் செய்தவன்
இன்று காலனுக்கு இரையாகிவிட்டான்
நான் தெருமுனை செல்லும் வரை
இனி யார் வாசலில் நின்று பார்ப்பது
நான் வாசல் கதவருகே வந்தால்
இனி யார் வந்து வாலாட்டி வரவேற்பது
என் மடிதனில் புரள்வது பிடிக்கும்
இன்று என்னை விட மரணம் பிடித்துவிட்டது போலும்
குரைத்து என்னுடன் விளையாடியவன்
இன்று எனை மௌனமாக்கி சென்றுவிட்டான்
என் மேல் உயிராய் இருந்தவன்
இன்று உயிரற்று கிடக்கிறான்
எனை மீண்டும் சிறுபிள்ளை மனதிற்கு கொண்டு வந்தவன்
இன்று மண் சிறைக்குள் சென்றதேனோ!
இன்று ஒதிங்கி சென்றுவிட்டான்
எங்களின் பாசம் புரியாது உங்களுக்கு
கண்களால் பேசி காதல் செய்தவன்
இன்று காலனுக்கு இரையாகிவிட்டான்
நான் தெருமுனை செல்லும் வரை
இனி யார் வாசலில் நின்று பார்ப்பது
நான் வாசல் கதவருகே வந்தால்
இனி யார் வந்து வாலாட்டி வரவேற்பது
என் மடிதனில் புரள்வது பிடிக்கும்
இன்று என்னை விட மரணம் பிடித்துவிட்டது போலும்
குரைத்து என்னுடன் விளையாடியவன்
இன்று எனை மௌனமாக்கி சென்றுவிட்டான்
என் மேல் உயிராய் இருந்தவன்
இன்று உயிரற்று கிடக்கிறான்
எனை மீண்டும் சிறுபிள்ளை மனதிற்கு கொண்டு வந்தவன்
இன்று மண் சிறைக்குள் சென்றதேனோ!
Subscribe to:
Posts (Atom)